free website hit counter

Sidebar

26
பு, மார்
30 New Articles

39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவில் நேற்று சில தமிழ்படங்களைப் பார்க்க முடிந்தது.  இவற்றில் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள், சிவில் யுத்த தாக்கம் என்பன  தொடர்பான சில படங்களையும் பார்க்க முடிந்தது.

இன்று ஆரம்பமாகும்  39வது ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழாவின் நியூ டெரிட்டரி பிரிவு, சமகால இலங்கை சினிமாத் தேர்வின் கண்காணிப்பாளராக இலங்கைத் தமிழரான  இயக்குனர் கீர்த்திகன் சிவகுமார் செயலாற்றுகின்றார். இத்திரைப்பட விழா தொடர்பாக cinebulletin இணையத்தளத்திற்காக, 
கீர்த்திகன் சிவகுமாரை, அலெக்ஸாண்ட்ரே டுகோம்முன்  Alexandre Ducommun  செய்த நேர்முகம், 
" புலப்பெயர்வுக்கும் தேசிய வரலாற்றிற்கும் இடையிலான புதிய இலங்கை சினிமா" எனும் தலைப்பில் கடந்த பெப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. அதன் தமிழாக்கத்தினை, Alexandre Ducommun அவர்களுக்கும், cinebulletin இணையத்தளத்திற்குமான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team

எதிர் வரும் (2025) மார்ச் 21ந் திகதி  முதல் 30ந் திகதி  வரை, சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள ஃப்ரிபோர்க் சர்வதேச திரைப்பட விழா (FIFF) வில்,  இலங்கையிலிருந்து தமிழ், சிங்கள மொழிப் படைப்பாளிகளில் பலரும் கலந்து கொள்கின்றார்கள்.  

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள  லா சேப்பல் (Quartier de La Chapelle) தொழிற்புரட்சிக்கு முன்னர் ஒரு வனப்புறு கிராமம். 19 ஆம் நூற்றாண்டில் வடக்கு இரயில்வே நிறுவனம் மற்றும் கிழக்கு இரயில்வே நிறுவனங்களின் வழித்தடங்கள் திறக்கப்படவும், இப்பகுதி மக்கள் நெருக்கம் நிறைந்த நகர்பகுதியாக மாறியது என்கிறார்கள்.

மிதக்கும் நகரம் எனப் பெருமையுற்ற வெனிஸ் நகரத்தில் லிட்டில் ஜப்னா (Little Jaffna) ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆச்சரியம் மட்டுமல்ல அளவற்ற மகிழ்ச்சியும் தரக் கூடிய செய்தி இது. 

சர்வதேச  திரை  படைப்பாளர்களுடன் உள்ளூர் படைப்பாளர்களையும் சேர்த்து கௌரவித்து விருதுகளை வழங்கி வைக்கும் நிகழ்வோடு 7 நாட்கள் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ் சர்வதேச திரைப்பட விழா 2024 நேற்று 09ஆம் திகதி நிறைவுற்றது.

யாழ்ப்பாணத்தில் இவ்வார இறுதி நாட்களான செப்டெம்பர் 7, 8ந் திகதிகளில் யாழ். சர்வதேச திரைப்படவிழாவின் 10வது பதிப்பு  நடைபெறுகிறது.  

©Locarno Film Festival / Ti-Press

இன்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ள 77 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் மிக உயரிய தங்கச்சிறுத்தை விருதினை (Pardo d’Oro), லிதுவேனியன் இயக்குனர் Saulé Bliuvaité இன் Akiplėša (Toxic) பெற்றுக்கொண்டது. இளம் பருவ வயது பெண்களிடம் (teenage) சமூகம் முன்வைக்கும் எதிர்பார்ப்புக்கள், அழுத்தங்களை அடிப்படையாக கொண்ட இப்புனைவுத் திரைப்படம் லிதுவேனிய சினிமாவிற்கு கிடைத்த முதன்மையான ஒரு அங்கீகாரமாகும். 

லொகார்னோ பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில்,  Claude Barras இன் புதிய அனிமேஷன் திரைப்படம் Sauvage (காட்டுமிராண்டி) பார்த்துக் கொண்டிருந்த போது எம்முள் எழுந்த கேள்வி யார் காட்டு மிராண்டி ?

ஷாருக்கானுக்கு லொகார்னோ திரைப்பட விழாவில் ஆகஸ்ட் 10ல் கௌரவ சினிமா விருது வழங்கப்பட்டது.  அன்றைய தினம், ஷாருக்கானின் ரசிகர்கள் வட்டத்தின் பரவசமும், பரபரப்பும், பியாற்சா கிராண்டே பெரும்முற்றத்தில் தனித்து தெரிந்தது.

சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச  திரைப்படவிழாவின் 77வது பதிப்பு ஆகஸ்ட்  07ந் திகதி புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

மற்ற கட்டுரைகள் …