ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் திகதி, ஶ்ரீலங்கா, சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. கொடிகள் ஏற்றப்படுகின்றன. அணிவகுப்புகள் நடக்கின்றன. தேசப்பற்று உரைகள் ஒலிக்கின்றன. ஆனால் அந்த மேடைகளிலிருந்து தொலைவில், இன்னும் சில தாய்மார்கள் சாலையோரத்தில் புகைப்படங்களைத் தாங்கி நிற்கிறார்கள். அவர்கள் கொண்டாடவில்லை. அவர்கள் காத்திருக்கிறார்கள். “எங்கே என் மகன் ?", " என் பிள்ளை எங்கே?”, எனும் கேள்விகளுக்கு இந்த நாடு இன்னும் பதில் தரவில்லை. இதுவே ஶ்ரீலங்காவின் உண்மையான அரசியல் முகம்.