தமிழி வலைக்காட்சி
-
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா" -
தமிழில் சித்திரக் கதைகள், அசைபடங்கள் கொண்ட கானொளிகளில், புதிய கதைகளையும், புதிய காட்சிகளையும் கொண்டுவரும் ஒரு முயற்சி இது. எமது சிறுவர்கள் மத்தியில் டோரா அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு, தமிழ் கதாபாத்திரங்கள் நினைவில் இல்லை.மலர் எனும் சிறுமியின் கதைகளைக் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சொல்லத் தொடங்கினோம். இப்போது அதனை இன்னமும் ஒருபடி முன்னகர்த்தி இருக்கின்றோம். மலரை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.
-
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
-
இராஜகோபுரம் எங்கள் தலைவன் பாடல், தமிழர்கள் வாழும் நிலங்களிலெல்லாம் ஒலித்த பாடல். அந்தப் பாடலின் மூல இசைக்கோர்ப்பே அருமையாக இருக்கும். அந்தப் பாடலை இப்போது ஐரோப்பிய சிம்பொனி ஆர்கெஸ்ரா இசைக் கோப்பாக மகிழன் youtube தளத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள். Budapest Scoring Orchestra சிம்பொனி இசைக்கோப்பும், வாத்தியங்களின் கூட்டிசைவும், காட்சிப்பதிவும், இந்தப் பாடலுக்கான புதிய பரிமானத்தை தருகிறது. இம் முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும், பாடலின் மூலக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டலாம்.
4TamilMedia - All Videos

திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு

உலகெங்கிலுமிருந்து இந்தச் சாளரப் பலகணியைக் காண்பதற்காக தினமும் ஆயிரக் கணக்கில் ஏன் மக்கள் குவிகின்றார்கள்

இலங்கையின் முக்கிய தமிழ் இயக்குனர்களில் ஒருவரான ஞானதாஸ் அவர்களின் நெறியாள்கையில் பல இளையவர்களின் கூட்டுழைப்பாக, யாழ்ப்பாணத்தின் 2K FOLKS குழுவின் புதிய தொனியில் " பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்" .