In The Spotlight
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார், உலக சுகாதார நிறுவனம் COVID-19 தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாகக் கையாண்டதாகக் கூறினார்.
எதிர்காலத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் வாகனங்களை வழங்கும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவுக்கும், அனுராதபுரம், ரம்பேவ பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை ஏற்பட்டதாக கூறப்படும் வாக்குவாதம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"
-
தமிழில் சித்திரக் கதைகள், அசைபடங்கள் கொண்ட கானொளிகளில், புதிய கதைகளையும், புதிய காட்சிகளையும் கொண்டுவரும் ஒரு முயற்சி இது. எமது சிறுவர்கள் மத்தியில் டோரா அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு, தமிழ் கதாபாத்திரங்கள் நினைவில் இல்லை.மலர் எனும் சிறுமியின் கதைகளைக் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சொல்லத் தொடங்கினோம். இப்போது அதனை இன்னமும் ஒருபடி முன்னகர்த்தி இருக்கின்றோம். மலரை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.
-
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
-
இராஜகோபுரம் எங்கள் தலைவன் பாடல், தமிழர்கள் வாழும் நிலங்களிலெல்லாம் ஒலித்த பாடல். அந்தப் பாடலின் மூல இசைக்கோர்ப்பே அருமையாக இருக்கும். அந்தப் பாடலை இப்போது ஐரோப்பிய சிம்பொனி ஆர்கெஸ்ரா இசைக் கோப்பாக மகிழன் youtube தளத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள். Budapest Scoring Orchestra சிம்பொனி இசைக்கோப்பும், வாத்தியங்களின் கூட்டிசைவும், காட்சிப்பதிவும், இந்தப் பாடலுக்கான புதிய பரிமானத்தை தருகிறது. இம் முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும், பாடலின் மூலக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டலாம்.
Top Stories
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் பொறிமுறைக்கு இணங்கத் தவறினால் அரிசி ஆலைகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சாத்தியமான கூடுதல் தடைகள் குறித்த விவரங்களை டிரம்ப் தெரிவிக்கவில்லை. பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிற்கு பெரிதும் தடை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் விவகாரத்தையும் தனது நிர்வாகம் கவனித்து வருவதாகக் கூறிய டிரம்ப், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று தனது கருத்தைச் சொன்னார்.
"நாங்கள் (உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமைர்) ஜெலென்ஸ்கியுடன் பேசுகிறோம், நாங்கள் விரைவில் ஜனாதிபதி புட்டினுடன் பேசப் போகிறோம்" என்று டிரம்ப் கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த தலையிடுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்ததாக டிரம்ப் கூறினார்.
"அவர் அதைப் பற்றி அதிகம் செய்யவில்லை. நமக்கு நிறைய அதிகாரம் இருப்பது போல, அவருக்கு நிறைய... அதிகாரம் இருக்கிறது. நான் சொன்னேன், ‘நீங்கள் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.’ நாங்கள் அதைப் பற்றி விவாதித்தோம்.
ஆதாரம்: ராய்ட்டர்ஸ்
ஐந்து வருட இடைநிறுத்தத்தின் பின்னர் பெப்ரவரி மாதம் வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்கும் போது விலை அதிகரிப்பு காணப்பட்டாலும், சந்தை நடத்தைக்கு ஏற்ப விலை படிப்படியாக குறையும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு இலங்கை தேங்காய் தொழில்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்யவும், அனுராதபுரத்தில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொண்டதாகவும் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கவும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று தெரிவித்தார், உலக சுகாதார நிறுவனம் COVID-19 தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாகக் கையாண்டதாகக் கூறினார்.
வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள் அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும் செயற்பட்டிருக்கிறார்.
ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.
Top Stories
விடுதலை இரண்டாம் பாகம், எம்மை வேறோர் களத்துக்கு மெல்ல நகர்த்திச் செல்கிறது. நம்மவர்கள் பலரும் அறிந்த கதைதான். ஆனால் அதனுள்ளே அறியாத பல அரசியற் சூழ்ச்சிகள், அதற்குப் பலியாக்கப்படும் அப்பாவி மனிதர்களின் துயர்கதைகள் தொடருகின்றன.
விஜய் 69 மிகச் சிறிய கதை. ஆனால் அதன் வாழ்க்கை அனுபவம் பெரியது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவதற்கு எடுக்கும் முயற்சியும், அதில் வரும் தடைகளும், அந்தத் தடைகள் தாண்டி தன் இலக்கை அடைந்தானா என்பதுதான் விஜய் 69 திரைப்படத்தின் கதை.
மலையாள திரையுலகின் மிகப்பெரிய திட்டமாக கூறப்படும், மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் மகேஷ் நாராயணன் திரைப்படம் இலங்கையில் அதன் முதல் அட்டவணையை தொடங்கியது.
2019ல் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் பார்வையாளர் விருது பெற்ற திரைப்படம் Camille . Camille Lepage எனும் 26 வயது போர்க்கள பெண் புகைப்பட நிருபர் ஒருவரின், வாழக்கை குறிப்பை மையமாக வைத்து, பிரெஞ் இயக்குனர் Boris Lojkine அப்படத்தை இயக்கியிருப்பார்.
பார்வைகள்
இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திய பிரபலமான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி மன்மோகன் சிங்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் மிகவும் கஷ்டமான ஒரு நிலைமையாக உள்ளது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலை தொடரும். உலகெங்கிலும் சிறுபான்மையினங்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ன.
இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்றத் தேர்லின் பின்னாக, இனவாதம், தமிழ்தேசியம், குறித்த பல குரல்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றும் அவரவர் தேடல், தெளிவு, தெரிவு என்பவற்றின் விசாலப் பரப்பிற்கானவை.
நவம்பர் 14 ந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்துகான தேர்தல். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன மாநாடு, தமிழகத்தின் நேற்றைய தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
வாசகசாலை
தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடும் சூரியப் பொங்கல். முன்பொரு காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?
இலங்கையின் வடபுலத்தில் தெல்லிப்பழை எனும் ஊரில் 1925ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ந் திகதி, அப்பாகுட்டி தையற்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த தங்கங்கம்மா அப்பாகுட்டி, ஈழத்தின் சைவப்பாரம்பரியத்தில், நன்கு அறியப்பட்ட ' சிவத்தமிழசெல்வி' யாக வலம் வந்தவர்.
நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.
பகை நடுவினில் அன்புரு வான நம் பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் என்று பாடினான் தமிழ் மகாகவி பாரதி. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். பாரதியின் மான்பினை மனதினிற் கொள்வோம்.
தீபாவளி என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இந்து மதத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும்.
பயனர்கள் நேரடியாக பயன்பாட்டிற்குள் ஆவணங்களை ஸ்கேன் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்துடன் ஆவணப் பகிர்வை எளிதாக்குவதில் WhatsApp ஒரு படி முன்னேறியுள்ளது.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஜனவரி 20 முதல் 26 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்காக தீயணைப்பு வீரர்களாக ஆடுகள் பணி அமர்த்தப்பட்டுள்ளது.
தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?