இலங்கை பாடசாலை மாணவர்களிடையே, கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் மார்ச் 14ம் திகதி நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்து கொண்டு உரையாற்றுகையில்," ஊடகங்கள் வழங்கும் செய்திகள் மீதான, சமூக நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. அதுபோலவே சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் மக்கள் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும்', பாடசாலை மட்டத்திலான திறமையாளர்களுக்கு ஊடக விருதுகளும், பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த விழாவினை கொழும்பு ஆனந்தக் கல்லூரியின் ஊடகப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
