சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஆக. 4) மாலை நடைபெறுகிறது.
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை நாளை (ஆக. 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் (ஆக. 6) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (ஆக. 4) மாலை நடைபெறுகிறது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் மற்றும் பேரவை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
