free website hit counter

உள்ளம் அமைதி கண்டால்
உலகம் மென்மை ஆகும்
நன்றி ஒரு விதை போட்டால்
நாள் முழுதும் மலரும்

நன்றி உணர்வு என்பது, ஆன்மீகத்தையும் மனநலத்தையும் இணைக்கும் ஒரு அழகான பாலம். வாழ்க்கையில் இதனை ஒரு பயிற்சியாகப் பழகிக் கொள்வதை Gratitude Practice என்கிறார்கள்.

அன்பின் குரலில் ஆற்றல்
அமைதியின் வழியில் பயணம்
நன்றி கொண்ட நம் உள்ளம்
புது நாளுக்கு உயிர் ஊட்டும்

காலை ஒளியாகும் பெண்மை
கனவுகளை எழுப்பும் தீபம்
நன்றி சொல்லும் நல் இதயம்
நாளை உருவாக்கும் சக்தி

அவசரம் இல்லாத ஒரு நிமிடம்
அமைதியோடு ஆரம்பம்
நன்றி சொல்லும் அன்பு இதயம்
நாள் முழுதும் தாங்கும் பலம்

கண் திறந்தேன் – ஒரு வரம் இன்று
காற்று தொடும் – ஒரு அருள் இன்று
நன்றி சொல்லும் இதயம் இருந்தால்
நாளும் எனக்கு திருவிழா இங்கு

விடியலில் விழிக்கும் விழிகள்
விதியையும் மாற்றும் விழிகள்
நன்றி சொல்லும் ஒரு நொடியில்
நாளெல்லாம் ஒளி பரவும்

மற்ற கட்டுரைகள் …