free website hit counter

தேமுதிக நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், இளைஞர்களின் வாக்குகளை கவர திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக மாவட்ட அளவில் இளைஞர்களுக்கு புதிய பதவிகளை வழங்கவும் அவர் முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக தரப்பில் பேசப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசுக்காக ஆண்டுதோறும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ஆளிக்கும் ஒரே மாநிலம் டெல்லி. டில்லியில் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கையும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், பழைய வாகனங்கள் மூலம் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடை காலம்  நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு கடலுக்கு செல்லாது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும்.

குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும் எனவும் தமிழகத்தில் தாமரை இரட்டை
இலையோடு மலரும் என்றும் பா.ஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை
அனைத்து தர மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் கட்சியை எடுத்துச் சென்றதில் மிக
முக்கிய பங்காற்றியதில் மட்டுமல்லாமல் பா.ஜ.,வை பற்றி பேசாமல் தமிழகத்தில் எந்த
நிகழ்வும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்தார் என புகழாரம் சூட்டினார். நயினார்
நாகேந்திரன் தமிழகத்தில் அடித்தளம் அமைப்பார் எனவும் ஒன்றிணைந்து
பணியாற்றுவோம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி'' என நிருபர்கள் எழுப்பிய
கேள்விக்கு சீமான் கலகலப்பாக பதில் அளித்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில்,
வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.

அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …