தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடை காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு கடலுக்கு செல்லாது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும்.
தமிழ்நாட்டில் இரட்டை இலையோடு தாமரை மலரும்: தமிழிசை சவுந்தரராஜன்
குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும் எனவும் தமிழகத்தில் தாமரை இரட்டை
இலையோடு மலரும் என்றும் பா.ஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை
அனைத்து தர மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் கட்சியை எடுத்துச் சென்றதில் மிக
முக்கிய பங்காற்றியதில் மட்டுமல்லாமல் பா.ஜ.,வை பற்றி பேசாமல் தமிழகத்தில் எந்த
நிகழ்வும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்தார் என புகழாரம் சூட்டினார். நயினார்
நாகேந்திரன் தமிழகத்தில் அடித்தளம் அமைப்பார் எனவும் ஒன்றிணைந்து
பணியாற்றுவோம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபருடன் மட்டும் கூட்டணி – சீமான்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி'' என நிருபர்கள் எழுப்பிய
கேள்விக்கு சீமான் கலகலப்பாக பதில் அளித்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில்,
வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
நடந்தது.
தவெக - திமுக இடையேதான் போட்டி !
அதிமுக - பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
“அ.தி.மு.க. - பா.ஜ.க. தோல்விக் கூட்டணியே ஒரு ஊழல்தான்!” – தமிழக முதல்வர் ஸ்டாலின்
இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆதார் அட்டைக்கு மாற்றாக சோதனை அடிப்படையில் செயலி அறிமுகம்
எங்கு போனாலும் ஆதார் அட்டையை தூக்கி கொண்டு போனவர்கள் இனிமேல் கையை வீசிக்கொண்டு செல்லலாம்.ஆதார் அட்டையை கையில் வைத்து கொண்டு அலைவதற்கு மாற்று வழியாக செயலி ஒன்றை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு
சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தில் மீண்டும் அதிமுகவும் பாஜகவும் கை கோர்த்துள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.