free website hit counter

வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாணைகள் தெரிவித்தன.

சென்னை எம்.ஆர்.சி.நகர் அலுவலகத்தில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக 'டாஸ்மாக்' இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகத்தில் வெற்றி பெற்று, நேற்றைய தினம் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவு பெற்றதும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய், இன்று (10) தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இது அம்மாநிலத்தின் அரசியல் களத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் குறிக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …