இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை (மே 15) நெதர்லாந்துக்கு வந்தடைந்தார்.
வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளில் ஐரோப்பிய நாட்டின் தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பு என்பவை குறித்து, பிரதமர் மோடி பயணம் குறிப்பாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வர்த்தகம், முதலீடு மற்றும் நீர், விவசாயம், சுகாதாரம் போன்ற முன்னுரிமைத் துறைகள் போன்ற பாரம்பரியத் துறைகளுக்கு அப்பால், இந்தியாவும் நெதர்லாந்தும் சமீபத்திய ஆண்டுகளில் ஒத்துழைப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன.
தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, செமிகண்டக்டர்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கல்வி மற்றும் கடல்சார் துறை உள்ளிட்ட மூலோபாயத் துறைகளில் இந்தக் கூட்டாண்மை வளர்ந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து வந்த பாரதப் பிரதமருக்கு பண்பாட்டு ரீதியான வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும் நெதர்லாந்து வாழும் இந்திய மக்களுடனான சந்திப்பும் நிகழ்ந்தது. பிரதமரின் இந்தப் பயணத்தின் போது, முதலாம் இராஜேந்திர சோழனது செப்புப்பட்டயங்கள் சில பாரதப் பிரதமரிடம் கையளிக்கப்படுவதாகத் தெரியவருகிறது.
ஆனைமங்கலம் செப்பேடுகள் எனும் சிறப்புமிக்க இந்தத் தமிழர் தொல் ஆவணங்களை, இன்றைய தினம் நெதர்லாந்து அரசு, இந்திய அரசிடம் அதிகார பூர்வமாக கையளிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.
