free website hit counter

விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை  4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள்  அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும்  செயற்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை கூடிய தமிழ் சிவில் சமூகக் கட்டமைப்பினர், தங்களை 'தமிழ் மக்கள் பொதுச்சபை'யாக அடையாளப்படுத்தி அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல் களம், தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற சிவில் சமூக அமைப்பொன்றை ஆரம்பிப்பதற்கான காரணியாக இருந்திருக்கின்றது என்பதை ஆரம்பத்திலேயே வரவேற்கலாம்.

மற்ற கட்டுரைகள் …