free website hit counter

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்பிற்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘சொப்பன சுந்தரி’யை உதாரணமாக முன்வைத்து ஆற்றிய உரை கவனம் பெற்றிருக்கின்றது. நாட்டின் பிரதான துறைமுகங்களை அரசாங்கம் சீனாவுக்கு தரைவார்த்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே, அவர் சொப்பன சுந்தரி விடயத்தை தொட்டார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா.சம்பந்தனும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் சம்பந்தன் அண்மையில் விடுத்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவரின் கொழும்பு வதிவிடத்துக்கு வருமாறு கட்சி தலைவர்களை அழைத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; பேச்சுக்கு வரவும் இல்லை. குறிப்பாக, சம்பந்தன் தலைமை வகிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் கூட பேச்சுக்கு வரவில்லை. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சி தன்னைத் தானே அசிங்கப்படுத்தி மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் எந்தவொரு கட்சியும் நடந்து கொண்டதில்லை. 

முன்னாள் போராளிகளை நோக்கி கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்ச் சூழலிலுள்ள பல தரப்புக்களினாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் “...முள்ளிவாய்க்காலில் நீங்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை?; தலைவர் பிரபாகரன் போராடி வீழ்ந்த போது, நீங்கள் எல்லாம் ஏன் தப்பி ஓடினீர்கள்?...” என்பது மாதிரியான கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள் இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும். உலகம் பூராவும் விடுதலைக்கான கோரிக்கையுடன் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகங்களின் குரல்களை அடக்குவதற்காக ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் போராட்டங்களுக்குள் பொறுக்கிகள், ரவுடிகள், குழப்பவாதிகளை இறக்கிவிடுவது வழக்கம். அதுவும், போராடும் தரப்புக்குள் இருந்தே புல்லுருவிகளை இனங்கண்டு கூலிப்படையாக ஆட்சியாளர்கள் மாற்றுவார்கள். அது, போராட்டங்களை இலகுவாக தோற்கடிப்பதற்கான உத்திகள். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, அவர் வகித்து வரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு கோருவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்றை அமைத்திருக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …