free website hit counter

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவை தொடர்ந்தும் பேணுவதற்கான முயற்சிகள், தமிழ் அரசுக்கு கட்சிக்கு வெளியில் இருந்து சில தரப்புக்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) சிரேஷ்ட தலைவர்கள் அண்மைக்காலமாக அந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழுப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று புதன்கிழமை காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பி அவர் உரையாற்ற இருந்த நிலையில், கைது செய்யப்பட்டிருக்கிறார். 

மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல் அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார். ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம். 

உயிர் வாழ்வதற்கு இரத்தம் இன்றியமையாதது என்றும், இரத்த தானம் செய்வதால் உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கூறுவதும் சாதாரணமானது. உலக சுகாதார நிறுவனம் இரத்த தானம் என்பதனை மற்றுமொரு நபருக்குக் கொடுக்கும் விலைமதிப்பற்ற பரிசு என்று கூறுகிறது. அவ்வாறிருக்கும் போது ஏன் இத்தகைய தாராள பண்பினை பாகுபாட்டிற்கும், களங்கத்திற்கும் உள்ளாக்க வேண்டும்? 

மனித உரிமைகளை மீறும் அன்னிய கலாச்சார மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் ஒருவரின் சொந்த சட்டமாகவும் நம்பிக்கையாகவும் மாற முடியுமா? உண்மையாக 1841ஆம் ஆண்டின் அலைந்து திரிவோர் கட்டளை சட்டம் (Vagrants Ordinance of 1841) மற்றும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவுகளை குற்றமாக்கிய 1883ஆம் ஆண்டின் தண்டனை சட்டக்கோவை (Penal Code of 1883) ஆகிய “விழுமிய சட்டங்களை” அறிமுகப்படுத்தியன் ஊடாக பிரித்தானிய காலனித்துவம் இலங்கைக்கு பரிசளித்தது இதுவேயாகும். 

வவுனியா, ஒலுமடு வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் உள்ளிட்ட விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் தொன்ம வழிபாட்டிடங்களில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: