உதயநிதி ஸ்டாலின் கைது, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்பேரவைக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் நேற்று (ஆக. 5) தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்றைய வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக. 6) முதல்முறையாக தாக்கல் செய்வுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது, பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்றியதாகக் கூறி திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
