free website hit counter

நம்  ஆன்மிக மற்றும் கலாச்சார மரபில் குருவிற்கு உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற முதுமொழியே குருவின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. மனிதனின் அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவொளியைப் பாய்ச்சுபவரே குரு. அத்தகைய குருமார்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கும் புனித நாளே குருபூர்ணிமா ஆகும். 

தமிழர் நாகரிகம் என்பது வெறுமனே மொழி மற்றும் இலக்கியப் பெருமைகளை மட்டும் கொண்டதல்ல. அது காலங்களோடும், இயற்கையோடும், இறைநம்பிக்கையோடும், குடும்ப வாழ்வியலோடும் இணைந்த ஒரு முழுமையான பண்பாட்டு வாழ்க்கை முறையாகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன், மாதுர் காரகன். நம் மனத்தின் எண்ணங்களுக்கான காரகத்துவமும்  சந்திரனுக்கானதே.

தமிழ் மாதங்களின் வரிசையில்  பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம்.  இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.

ஶ்ரீ இராமநவமி என்பது இந்து சமயத்தில் மிகவும் புனிதமான திருநாள்களில் ஒன்றாகும். இந்நாள், தர்மத்தின் உருவகமாக விளங்கிய ஸ்ரீ ராமரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத நவமி திதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ் பண்பாட்டில் காலம் என்பது வெறும் நாட்கள், மாதங்கள் எனக் கணக்கிடப்படும் அளவுகோல் மட்டுமல்ல; அது இயற்கை, மனித வாழ்வு மற்றும் ஆன்மீகம் ஒன்றோடொன்று இணைந்து இயங்கும் புனிதச் சுற்றுச் சுழற்சியாகக் கருதப்படுகிறது.

இந்து வேத ஜோதிடவியலில் நவகிரகங்களில் மிக முக்கியமானதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துபவனுமான கிரகம் சனி. “சனீஸ்வரன்” அல்லது “சனிபகவான்” என போற்றப்படும் இந்த கிரகம் மனித வாழ்க்கையின் கர்மப் பயன்களை அளிக்கும் நீதிபதியாக கருதப்படுகிறது. ஒருவர் வாழ்க்கையில் நிகழும் துன்பங்களும் சவால்களும் பெரும்பாலும் சனியின் சஞ்சாரத்துடன் தொடர்புடையதாக வேத ஜோதிடம் விளக்குகிறது.

மற்ற கட்டுரைகள் …