free website hit counter

அன்பே சிவமாகும். இந்த அகிலமெங்கும் பரந்து செறிந்து நிறைந்து வாழும் ஜீவன்கள் அனைத்திலும் அன்பு நிறைந்து இருக்கிறது. அந்த அன்புக்குள் சிவம் ஒளிந்திருந்து. எம்மை ஆட்கொள்கின்றான்.

இல்லங்களில் அக அழகினைக் கூட்டுவது இல்லக விளக்கு. இல்லக விளக்கிற்குச் சிறப்பான நாளான,கார்த்திகை விளக்கீடு என்பது தமிழர் மரபில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மிகப் பழமையான ஒளித் திருநாள்களில் ஒன்றாகும். இந்த நாளில் இல்லங்களில் தீபம் ஏற்றுவது அறிவையும் ஆன்மீகத்தையும் வெளிச்சப்படுத்தும் ஒரு புனிதச் செயல் என்று கருதப்படுகிறது.  இந்த மரபின் தோற்றம், அதற்குப் பின்னுள்ள தத்துவம், வழிபாட்டு முறைகள் பற்றிச் சற்று விரிவாகக் காணலாம்.

இல்லக விளக்கது இருள் கெடுப்பது என்கிறது அப்பர் தேவாரம். விளக்கு எனும் தீபம் ஏற்றுவது மங்கலம் தரும் விஷயம்.அதனால்தான் தமிழர்தம் வாழ்வியலின் முக்கிய தருணங்கள், வழிபாடுகளின் போதெல்லாம் தீபம் ஏற்றுதல் முக்கியம் பெறுகிறது.

கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ' சுவாமியே சரணம், ஐயப்பா சரணம்' எனும் சரணகோஷங்களும், ஐயப்ப பாடல்களும் எங்கும் ஒலிக்கும். கழுத்திலே துளசி மணிமாலைகளும், கறுப்பு நிற ஆடைகளுமாக காணும் இடங்கள் தோறும் ஐயப்ப பக்தர்கள் வலம் வருவார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தக் காட்சிகளைக் காணும் நாட்களாக அமைந்திருக்கிறது இன்றைய காலம்.

தரணியில் தர்மத்தை நிலை நாட்டும் ஒருவனது செயல், இப்பூலகைப் பாதுகாப்பதுடன் மட்டுமன்றி, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது.

சிவபெருமானை எல்லாக் காலங்களிலும் வழிபடலாம்.  ஆயினும் சில கிழமைகளில், சில காலங்களில் வழிபடுவது மிகச் சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான சிறப்பு வாய்ந்த ஒரு நாள் திங்கட் கிழமையாகும்.

சபரிமலை யாத்திரையை 'புனித யாத்திரை' என இலங்கை  அரசு பிரகடனம் செய்துள்ளது. இதற்காக அறிவிப்பு, அரச வர்தமானியில் யிடப்பெற்றுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: