free website hit counter

தேர்தல் ஆண்டொன்று பிறந்திருக்கின்றது. 2024 பிறப்பை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. இலங்கை, இந்தியா, அமெரிக்கா என்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. தேர்தலுக்கான அறிவிப்புக்கள் புதிய தலைமைகளை,கூட்டணிகளை மக்களிடம் அறிமுகம் செய்யும். ஏற்கனவே பல தடவைகள் ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டிருந்தாலும் புதிதாக வரும் ஆட்சியாளர்கள் தங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் சிறிதாக நம்பிக்கை கொள்வார்கள். தேர்தலுக்கு அப்படியொரு அசாத்திய வல்லமை உண்டு. இலங்கை மக்கள் இந்த ஆண்டு  ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்ற இரு தேர்தல்களைச் சந்திக்கப் போகிறார்கள். 

தேர்தல்களுக்கு புதிய நம்பிக்கையை மக்களிடம் விதைக்கும் ஆற்றல் உண்டு. எனினும் இலங்கையைப் பொறுத்தளவில் இம்முறை தேர்தல்கள் மக்களிடம் எந்தவித நம்பிக்கையையும் விதைக்கும் சாத்தியப்பாடுகளைக் காண்பிக்கவில்லை. புதிய ஆண்டு பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பை மக்களிடம் திணித்துக் கொண்டு பிறந்திருக்கின்றது. அது, அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடங்கி, அனைத்து பக்கங்களிலும் நெருக்கடியை திறந்து விட்டிருக்கின்றது. தேர்தல்களில் வெற்றிபெற்று யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு பெரிதாக மீட்சியில்லை என்ற உணர்நிலை மக்களிடம் உண்டு. ஆனால், அரசியல்வாதிகள் ஒருபோதும் மாறுவதில்லை. அவர்களின் ஒற்றை இலக்கு எப்படியாவது அதிகாரத்தை அடைந்துவிட வேண்டும். அதற்காக என்னமாதியான வேடத்தைத் தரித்துக் கொண்டு அரங்காற்றுகைக்கு தயாராக இருப்பார்கள்.

2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பித்த ராஜபக்ஷ எதிர் 'இன்னொரு தரப்பு' என்ற கட்டத்தை நாடு இன்னமும் தாண்டவில்லை. வரப்போகும் தேர்தல்களும் ராஜபக்ஷக்களை ஆதரிக்கும் தரப்புக்கும் எதிரான தரப்புக்கும் எதிரான மோதலாகவே இருக்கும். வழக்கமாக ராஜபக்ஷக்கள் தரப்பில் ராஜபக்ஷ சகோதரர்கள் யாராவது அதிகாரத்துக்காக போட்டியிடுவார்கள். ஆனால், இம்முறை அந்த இடத்தில் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு பதிலாக அவர்களின் சார்பில் ரணில் விக்ரமசிங்க இருக்கப் போகிறார். ஆக, ராஜபக்ஷக்களின் ரணில் எதிர் சஜித் பிரேமதாச என்ற நிலையே ஜனாதிபதித் தேர்தல் பிரதிபலிக்கப் போகின்றது.

2005 ஜனாதிபதித் தேர்தலில் புறக்கணிப்பு கோசத்தை முன்வைத்து தமிழ் மக்கள் ராஜபக்ஷக்களின் வெற்றிக்கு பெருவாரியாக உதவினார்கள். அதற்காக தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகமானது. முள்ளிவாய்க்கால் கரையின் கொடூர முடிவு வரை கொண்டு சென்றது. அதற்குப் பின்னரான காலத்தில், தென் இலங்கை  மக்கள் ராஜபக்ஷ ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அதிகமான தருணங்களில் நின்றிருக்கிறார்கள். 2015 ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், 2022 அரகலய (போராட்டம்) என்ற மூன்று தருணங்களைத் தாண்டி ராஜபக்ஷக்களுடனேயே தென் இலங்கை மக்கள் நின்றிருக்கிறார்கள். ஆனால், 2005 ஜனாதிபதித் தேர்தலில்  கையைச் சுட்டுக் கொண்டதன் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் ராஜபக்ஷக்களுக்கு எதிரானது என்ற நிலையில் துருவப்பட்டது. இன்றைக்கும் ராஜபக்ஷக்களின் ஆதரவோடு தேர்தலில் யார் களம் கண்டாலும் அவர்களுக்கு எதிராகவோ தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். அதனை இப்போதைக்கு மாற்ற முடியாது.

தமிழ்நாட்டு அரசியல் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆதரவு, எதிர் என்ற புள்ளியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக அதிக காலம் ஆட்சியை தக்க வைத்திருக்கின்றது. ஆனாலும் திமுக ஆதரவு, எதிர் நிலை என்பதுதான் தமிழக அரசியல் களம். அதுபோலத்தான், ராஜபக்ஷக்களின் அரசியல் நீடிக்கும் வரையில், தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எதிர்நிலை என்பது இயல்பானதாக இருக்கும். இந்த அடிப்படைப் புள்ளியை மறந்து நின்று யாராலும் அடுத்த கட்டங்களைச் சிந்திக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசிய அரங்கில் அல்லாடிக் கொண்டிருக்கும் கட்சிகளும் தவிர்ந்த முடியாமல் ராஜபக்ஷக்களுக்கு எதிரான நிலைப்பாடு என்ற கட்டத்தில் இருந்து வெளிப்படையாக மாற முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ரணில் எதிர் சஜித் என்ற துருவப்பட்டு நின்கின்ற நிலையில், ரணிலின் நட்புப் பட்டியலில் இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சிலவும் அதன் முக்கியஸ்தர்களும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில் கடந்த காலத்தில் ரணிலிடம் தனிப்பட்ட ரீதியில் ஆதாயங்களைப் பெற்றவர்கள் அதிகமுண்டு. பினாமிகளின் பெயர்களில் மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் தொடங்கி, நிதி மூலங்கள் வரையில் ரணிலிடம் ஆதாயம் பெற்ற முதலைகள் தமிழ்த் தேசிய அரசியலில் உலவுகின்றன. அப்படியான தரப்பினருக்கு ரணிலின் வெற்றி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், ரணில் ராஜபக்ஷக்களின் முகமாக தேர்தல் களத்தில் வரவிருக்கும் நிலையில், ரணிலுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்க முடியாது. அப்படியான நிலையில், ரணிலை எப்படி காப்பாற்றுவது என்பதற்கான திட்டங்களை மெல்ல அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் முக்கியமானவை, தேர்தல் புறப்பணிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற இரு விடயங்கள்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக எழுந்தது. அது, ஒருபோதும் தென் இலங்கை அரசியல்வாதிகள் மீது முழுமையான நம்பிக்கையைக் கொண்டதில்லை. ஆனால், அரசியல் என்பது சந்தர்ப்பங்களை சமயோசிதமாக கையாளுதல் என்ற போக்கில் தென் இலங்கையின் அரசியலோடு சில தருணங்களில் சில இணக்கப்பாடுகளைக் கண்டிருக்கின்றது. அது எதிர்வரும் காலத்திலும் தொடரலாம். ஆனால், தமிழ் மக்களின் உணர்நிலை என்பது பெரும்பாலும் ஒரே புள்ளியில் திரளும் போது அதற்கு எதிரான களத்தை யார் திறந்தாலும் அவர்களின் செயற்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் தேவை உண்டு. ஏனெனில், மக்களின் உணர்வுகளுக்கு எதிரான பக்கம் செல்லும் தரப்பினர், அதற்கான காரணத்தை மக்களிடம் தெளிவுபடுத்தி அவர்களை தங்களின் பின்னால் அழைத்துச் செல்ல முடியவில்லை என்றால், அந்த முடிவு மக்கள் விரோதமானது. ஜனநாயக ரீதியாக யாருக்கும் எந்த அரசியல்நிலைப்பாட்டின் பக்கத்திலும் செல்லும் உரிமை உண்டு. ஆனால், மக்கள் நிராகரிக்கும் பக்கத்தில் நின்று கொண்டு அந்த மக்களின் அரசியலைப் பேசுவதாக காட்டிக் கொள்ள முடியாது.

2005 ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு கோசத்தினால் நிகழ்ந்த விளைவுகளை அடுத்து, தமிழ்ச் சூழலில் யார் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தை எடுத்து வந்தாலும் அவர்களை சந்தேகத்தோடுதான் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். புறக்கணிப்பு கோசத்தோடு வரும் தரப்பினர் ராஜபக்ஷக்களுக்காக வேலை செய்கிறார்கள் என்கிற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள். அதனால்தான், தமிழ்த் தேசிய அரசியலில் பிரதான கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சியும், ஒருகாலத்தில் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் புறக்கணிப்பு கோசத்தினை முன்வைப்பதில்லை. 2009 கோர முடிவுகளின் பங்காளிகளில் ஒருவரான சரத் பொன்சேகாவை 2010 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக ஆதரிப்பதற்கும் காரணமானது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்களை வீழ்த்த முடியும் என்ற நிலையில், தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தோடு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை அதே ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் மோசமாக தோற்கடித்தார்கள். ஒரு கட்டம் வரையில், முன்னணியினர், ராஜபக்ஷக்களின் துணைக்குழுவினர் என்ற ரீதியில் தமிழ் மக்களில் ஒருபகுதியினர் நம்பினர்.

இம்முறையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், வழக்கமாக ராஜபக்ஷக்களுக்கு எதிரான அணியில் இருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈ.பி.ஆர்.எல்.எப் என்பன தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறன. இந்த முடிவு, தமிழ் மக்களை தென் இலங்கை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதனால் எடுக்கப்பட்டது என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் இணைந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளராக அவர் மேற்கண்ட அறிவித்தலை கடந்த நவம்பர் மாத ஆரம்பத்தில் விடுத்தார். தென் இலங்கை அரசியல் கட்சிகளும் தலைமைகளும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றன என்பது நிராகரிக்க முடியாத வாதம். ஆனால், அந்த வாதம், தமிழ் மக்களை கடந்த காலத்தில் மிகமோசமாக தோற்கடித்த தரப்பின் வெற்றிக்கு உதவும் என்று தெரிந்தால், அதனைத் தவிர்ப்பதுதான் சமயோசிதம். அதற்குப் பெயர்தான் அரசியல்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை வழக்கமாக புலம்பெயர் தரப்புக்கள் சிலவும் எம்.கே.சிவாஜிலிங்கமும்தான் வழக்கமாக முன்கொண்டு வருவார்கள். ஆனால், இம்முறை அந்த விடயத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் முன்னொழிந்திருக்கிறார்கள் என்பது பல கேள்விகளை எழுப்ப வைக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் இருக்கும் புளோட் இயக்கத்தினர் கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் நெருக்கமாக இயங்கிய தரப்பினர். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் முடிவு காலங்களில் கோட்டபாய ராஜபக்ஷவுடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் நெருக்கமாக இருந்தார். புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் இன்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவை கொண்டாடுவதைக் காண முடியும். அப்படியான நிலையில், புளொட் ராஜபக்ஷக்களின் வெற்றிக்காக அல்லற்படுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ரெலோவும் ஈபிஆர்எல்எப்பும் ஏன் அந்த முடிவின் பக்கத்தில் நின்கின்றன என்ற விடயத்தை மக்கள் ஆராயும் கட்டம் ஏற்பட்டிருக்கின்றது.

ரணிலின் வெற்றியை உறுதி செய்யும் ஆர்வத்தில் ரெலோவும் ஈபிஆர்எல்எப்பும் இருக்கின்றனவா என்பது அந்தக் கேள்வி? ஏனெனில் அந்தக் கேள்வியின் பின்னால் வவுனியாவின் மக்களின் எதிர்ப்பை மீறி சீனித் தொழிற்சாலையை அமைக்கும் விடயத்தில் செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேந்திரன் ஆகியோர் காட்டிய ஆர்வத்தை கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏற்கனவே, ரெலோ இயக்கத்துக்குள் இதற்காக செல்வமும் சுரேனும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், பலமுறை தமிழ் மக்களினால் நிராகரக்கப்பட்ட சீனித் தொழிற்சாலையை பொய் நிறுவனம், முகவரி, அலுவலகம் என்ற அடையாளங்களோடு செல்வமும், சுரேனும் யாருக்காக அமைக்க முயன்றார்கள் என்ற சந்தேகம் இருக்கின்றது. அதற்காக, ரணிலின் ஆசிர்வாதம் அவர்களுக்கு முழுமையாக இருந்தது. அப்படியானால், அதற்கான நன்றி விசுவாசத்தின் விளைவா தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது எழும் சந்தேகங்களில் ஒன்று. இப்படி நிறையை விடயங்களை வைத்து தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை பேசலாம். தேர்தல் வரும் போது இவ்வாறான நிறைய விடயங்கள் பேசப்படலாம்.

இன்னொரு பக்கம் கடந்த ஒரு வருடகாலமாக ரணிலோடு மிக நெருக்கமாக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், 'சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்...' என்ற கட்டத்திற்கு வந்திருப்பதாக காட்டிக் கொள்கின்றார். அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ரணில் முழுமையாக அமுல்படுத்துவார். அதற்கான ஒத்துழைப்பை தமிழ்க் கட்சிகள் வழங்க வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் வரையில், விக்னேஸ்வரன் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், அண்மையில் தமிழ்க் கட்சிகளுடன் ரணில் நடத்திய சந்திப்பை புறக்கணித்த விக்னேஸ்வரன், கடந்த காலத்தில் தனக்கு அளித்த வாக்குறுதிகளை ரணில் நிறைவேற்றவில்லை. அதனால், அவருடனான சந்திப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார். அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பை இரண்டு விதமாக நோக்கலாம். முதலாவது, அவர் இன்னமும் முன்பள்ளி பருவ அரசியல்வாதியாக இருக்கிறார் என்பது. இரண்டவாது, மிக முக்கியமானது, ரணிலையும் தன்னையும் அரசியலில் காப்பாற்றும் உத்தி.

ரணிலோடு அண்மையாக நாட்கள் வரையில் நெருக்கமாக இருந்த விக்னேஸ்வரன், திடீரென அவரில் நம்பிக்கை இல்லை என்று கூறுவதன் பின்னால் எழும் சந்தேகங்கள் முக்கியமானவை. ராஜபக்ஷக்கள் ஆதரவளித்தாலும் ரணில் வெற்றி என்பது கேள்விக்குரியது. தமிழ் மக்கள் வாக்களிப்பைத் தவிர்த்தால், ரணிலின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், ராஜபக்ஷக்களுக்கு (ரணிலுக்கு) எதிராக திரளும் தமிழ் வாக்குகள் ஒருபோதும் சஜித்துக்கு சென்று விடக் கூடாது என்ற நோக்கில், திசைதிருப்பல் நாடகத்தை விக்னேஸ்வரன் ஆரம்பித்திருக்கிறாரோ என்ற விடயம் மேலெழுகின்றது. அதிலும் குறிப்பாக, தமிழ்ப் பொது வேட்பாளராக தான் போட்டியிடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு காய்களை அடிக்க அவர் நினைக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் முன்மொழிந்தாலும் அங்குள்ளவர்களில் யாரும் வேட்பாளர்களாக மாட்டார்கள். அப்படியான நிலையில், அந்த வேட்பாளர் நிலைக்கு தான் நகர்ந்தால், அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலுக்கான கூட்டொன்றை அமைத்துக் கொள்ள முடியும் என்பதும் அவரது எதிர்பார்ப்பு. அப்படி அமைந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று விக்னேஸ்வரன் நினைக்கலாம். தற்போதுள்ள நிலையில், விக்னேஸ்வரனுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது இல்லவே இல்லை. அவரின் பின்னால் உள்ளவர்களில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனைத் தவிர யாரும் வாக்குச் சேர்க்கும் வல்லமையுள்ளவர்கள் இல்லை. அதனால், தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற அரங்கைத் திறந்து அதில், ஆதாயம் தேட அவர் முனைகிறார் என்று கருத வேண்டியிருக்கின்றது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் தேர்தல்களை எதிர்காலத்தில் தங்கள் சந்திக்கப் போகும் பாரிய நெருக்கடிகளின் அளவை குறைக்கும் கருவியாகவே கொள்கிறார்கள். அதன்போக்கில்தான், அடுத்து வரும் தேர்தல்களையும் கொள்வார்கள். மற்றப்படி, தேர்தல் புறக்கணிப்பு கோசத்தின் பின்னாலோ, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு பின்னாலோ செல்லும் வாய்ப்புக்கள் இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னால் மக்களின் உணர்நிலைகளுக்கு பின்னாலேயே தமிழ்த் தேசிய அரசியல் இயங்கியிருக்கின்றது. அதற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்கமாக அரசியல் கட்சிகளும் தலைமைகளுமே மக்களை வழிப்படுத்தும். ஆனால்,விடுதலைப் புலிகளின் முடிவுக்குப் பின்னர் ஈழத் தமிழ்ச் சூழலில் அது மறுவளமாக நடைபெற்று வருகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல் ஆடப்படும் அரங்குகளை மக்கள் ஒருபோதும் கண்டு கொள்வதில்லை. 

 

விடயம் ஒன்று,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கற்கைநெறிகள் ஆங்கில மொழி மூலம் இடம்பெற்று வருவது தொடர்பில் சில தரப்புக்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. ஆங்கில மொழி மூல கற்கைநெறிகள் தொடர்வதால் யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடருமானால் சிங்கள மயமாக்கல் தமிழர் தாயகத்தில் இன்னும் வேகப்படும் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. 

தமிழ் அரசியல், சமூக மற்றும் புலமைத்துவப் பரப்பு கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான நம்பிக்கையான முயற்சிகளையோ மாற்றங்களையோ காட்டாமல் வெறுமையால் நிரம்பியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுகளில் இருந்து சற்று வேகமாகவே மீண்டெழுவது தொடர்பிலான ஆக்ரோசத்தை தமிழ்ச் சமூகம் வெளிக்காட்டினாலும், அதனை நெறிப்படுத்தி முன்னோக்கி நகர்த்த வேண்டிய அரசியல் தரப்புக்களும், புலமைத்துவ பீடங்களும் ஆக்கபூர்வமாக எதனையும் மேற்கொள்ளவில்லை. அதனால், தமிழ்ச் சமூகம் பிளவுண்டது மாத்திரமன்றி, தவறான பக்கங்களை நோக்கிய விரைவாக ஓடத் தொடங்கியிருக்கின்றது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இன்னொருவருக்கு இடமளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து கவனம் பெற்றிருக்கின்றது. சம்பந்தன் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பினால் உடலளவில் பெரிதும் தளர்ந்துவிட்டார். அவரினால் வெளியிடங்களுக்கு பயணிக்க முடியவில்லை. பாராளுமன்றத்துக்கான வருகை என்பது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. அவர் என்ன பேசுகிறார் என்பதை இன்னொருவர் கேட்டு சொல்லும் நிலை இருக்கிறது. 

யாழ்ப்பாணத்தின் இன்றையநிலை தொடர்பில் அரசியல்  சமூக ஆய்வாளர் நிலாந்தன் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரை, புலம்பெயர் தேசத் தமிழர்களுக்கும் பொருந்தக் கூடியதே. அவருக்கான நன்றிகளுடன், அவரது இணையத் தளத்திலிருந்து பெறப்பட்ட இக்கட்டுரையினை அவருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தொடர்பைப் பேணும் வகையில் பாலம் அமைக்கப்படுவது இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்திருக்கிறார். ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய சில தினங்களுக்குள்ளேயே, மிலிந்த மொரகொட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தொடர்பை ஏற்படுத்துவதைத் குறித்து பேசியுள்ளமை கவனம் பெறுகின்றது.

இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், அவ்வப்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தொடர்பபை ஏற்படுத்துவது தொடர்பில் ஊடக வெளியில் பேசப்பட்டு வந்திருக்கின்றது. அதுபோல, யாழ்ப்பாணம் – தமிழ்நாட்டுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதன் விளைவாக, எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்திற்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே, பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தும் நடைபெற்று வருகின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலத்தொடர்பபை ஏற்படுத்துவது தொடர்பில் இந்தியாவோ, இலங்கையோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் அதிக கவனம் செலுத்தியிருக்கவில்லை. அதற்கு, இரு நாடுகளும் தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடக்குப் பகுதிக்குமான நிலத்தொடர்பு என்பது, இரு நாடுகளுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிற உணர்நிலை காரணமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் பெரு முதலாளிகள் தமிழ்நாட்டிலும் மன்னார் உள்ளிட்ட வடக்கு கிழக்கு இலங்கையிலும் பெரு முதலீடுகளைச் செய்திருக்கிறனர். அதனால், அவர்களின் தொழில் வளர்ச்சி தொடர்பில் இரு நாடுகளும் இப்போது அக்கறை கொள்கின்றன. நிலத்தொடர்பை ஏற்படுத்தி, பயணச் செலவு, நேரச் செலவு உள்ளிட்ட தொழிற்துறை உற்பத்திக்கான பாதக அம்சங்களை நீக்குவதற்கான நோக்கங்களை இரு நாடுகளும் கருத்தில் கொண்டிருக்கின்றன. அத்தோடு, கடலுக்கு அடியிலான கேபிள் இணைப்புக்கள், மின்சார பகிர்வு பற்றியெல்லாம் உரையாடல்கள் ஆரம்பித்திருக்கின்றன. அதனை, மிலிந்த மொரகொடவின் ஹிந்து செவ்வியில் புரிந்து கொள்ள முடியும்.

அதிக நேரங்களில் ஆட்சியாளர்கள் மக்களைக் காட்டிலும் பெருமுதலாளிகளுக்காகவே வேலை செய்திருக்கிறார்கள். இப்போதும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலத்தொடர்பு – பாலம் அமைப்பது தொடர்பிலான உரையாடல் அதன் நோக்கிலேயே மேலெழுந்திருக்கின்றது. அதிலும், கொழும்பு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற நிலையில், அதனைப் பிடித்துக் கொண்டு இந்தியா, தன்னுடைய ஆளுமையை தெளிவாக செலுத்துகின்றது. ஏற்கனவே, சீனாவிடம் கடன்பட்டு அல்லற்படும் இலங்கையை, கரையேற்றுவதற்கு இந்தியாவும் மேற்கு நாடுகளும் முயன்று வருகின்றன. அண்மையில் கூட, இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கான திரும்பப் பெறும் திகதிகளை மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் சீனா கைச்சாத்திட வேண்டும் என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருக்கின்றார். இந்திய மாநிலங்கள், ஜீ.எஸ்.டி வரிப் பங்கீட்டினை மத்திய நிதி அமைச்சு ஒழுங்காக செய்வதில்லை என்று தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல், இலங்கையின் கடன் மறுசீரமைப்புப் பற்றி, நிர்மலா சீதாராமன் அக்கறை கொள்வது என்பது முக்கியமானது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், தன்னை இந்தியா புதுடில்லிக்கு அழைத்து அங்கீகரிக்க வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால், ஒரு வருடத்துக்குப் பின்னர் கடந்த மாதமே அவர் டில்லிக்கு அழைக்கப்பட்டார். மோடியுடனான சந்திப்பு நடந்தது. இந்த இடைப்பட்ட ஒருவருடம் என்பது, இந்தியா ரணிலை கண்காணித்து எடைபோடுவதற்கான காலமாக பார்க்கப்பட்டதாக கொள்ளலாம். அவர், சீனாவையும், ராஜபக்ஷக்களையும் எப்படிக் கையாள்கிறார். தங்களுக்கான விசுவாசத்தை வெளிப்படுத்துகிறாரா என்று இந்தியா கணக்குப் போட்டது. இப்போது, ரணில் மீது பெருமளவு திருப்தி கொண்டிருக்கின்ற இந்தியா, அவரை தொடர்ந்து இலங்கையின் ஆட்சித் தலைவராக பேணும் முடிவுகளோடு இருப்பதாக கருதலாம். ஏனெனில், ரணிலோடு முறுக்கிக் கொண்டு நிற்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியா சரியாக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றது. ரணில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, தன்னுடைய பதவியை யாரும் கேள்விக்குள்ளாக்காத வகையில் உறுதிப்படுத்தும் நோக்கோடு இருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை அவர் நடத்த நினைக்கிறார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால், ரணிலுக்கு தமிழ் மக்களின் வாக்கு சிந்தாமல் சிதறாமல் கிடைப்பது அவசியமானது. இன்று இருக்கும் நிலையில், ரணில் ராஜபக்ஷக்களின் பினாமி என்கிற உணர்நிலை நாட்டு மக்களிடம் உண்டு. அப்படியான நிலையில், தமிழ் மக்கள் ரணிலை ஆதரிப்பதற்கான வாய்பபுக்கள் குறைவு. அதனால், அதனை மாற்றி, தமிழ் மக்களின் வாக்குகளை ரணிலுக்கு மாற்றிவிடுவதில் இந்தியா கவனம் செலுத்துகின்றது. அதுவே, அரசியலமைப்பின் 13வது திருத்தம் பற்றிய பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமைக்கான காரணமாகும்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கிய 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி, அதனையே தமிழ் மக்களுக்கான தீர்வு என்று தீர்ப்பு எழுத இந்தியா 35 ஆண்டுகளாக முனைந்து வருகின்றது. தென் இலங்கையைப் பொறுத்தளவில் 13வது திருத்ததையே நாட்டை பிளக்கும் ஏற்பாடாக பார்க்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், காணி அதிகாரத்தை முழுமையாக வழங்கி 13வது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என்று ரணில் அண்மையான நாட்களாக கூறி வருகின்றார். மாகாண சபைத் தேர்தலை நடத்தாது, 13வது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் பேசுவது அர்த்தமற்றது என்பது தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாதம். மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாது, 13வது திருத்த அமுலாக்கம் என்பது எப்படி சாத்தியம் என்பது, தமிழ்க் கட்சிகளின் கேள்வி. மாகாண ஆளுநர்களிடம் அதிகாரங்களைப் பகிர முடியாது. ஏனெனில், ஆளுநர் என்பவர் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி. அப்படியான சூழலில் மாகாண அதிகாரங்களைப் பகிர்ந்து, நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண அரசாங்கம் இயங்கியாக வேண்டும். அதற்கு, மாகாண சபைத் தேர்தல் அவசியம்.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசிய இந்தியத் தூதுவர் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குமான அழுத்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரணிலுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியிருப்பதாக கூறியிருக்கின்றார். மோடிக்கும் ரணிலுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பதை, தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, இந்தியத் தூதுவர் விளக்கமளிக்க வேண்டிய தேவை என்பது, ரணிலின் ஆட்சி நீடிப்புக்கு தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற நோக்கிலானது. அதனை உணர்ந்து கொண்டுதான், கடந்த திங்கட்கிழமை, அதாவது, இந்தியத் தூதுவருடனான சந்திப்புக்கு முதல் நாள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில், 13வது திருத்த அமுலாக்கத்தை ஒரு படிநிலையாகவும், மாகாண சபைத் தேர்தல்களின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதோடு, தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது இணைந்த வடக்கு கிழக்கைக் கொண்ட அதிகார பரவலாக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வீழ்ந்து போயிருக்கின்ற நாட்டின் பொருளாதாரம் மீள் எழுச்சி காண்பது என்பது அவசியமானது. அதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஆனால், ஒரு தரப்பு மக்களின் உரிமைகளும் உரித்துக்களும் அடகுவைக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் என்ற அடையாளம் என்பது ஏற்புடையது அல்ல. இப்போது, ரணிலை தக்க வைப்பதற்காக 13வது திருத்தம் என்ற குறைப்பிரசவத்தை தமிழ் மக்களின் தலையில் ஏற்றி வைக்க இந்தியா முயற்சிப்பது அறமற்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலத்தொடர்பை ஏற்படுத்தி, பொருளாதார நன்மைகளை ஏற்படுத்துவது குறித்து இந்தப் பத்தியாளருக்கு ஆதரவான கருத்து உண்டு. குறிப்பாக, நலிந்து போயிருக்கின்ற வடக்கு கிழக்கு மக்களின் சிறுகுடிசைக் கைத்தொழில்களின் பெருஞ்சந்தையாக தமிழ்நாடு வழி, இந்தியா விளங்கும். அதுபோல, சமய சுற்றுலா வளர்ச்சி தொடங்கி, பெருநிறுவனங்களின் வருகையும் தொழில் வாய்ப்பும் அதிகரிக்கும். அது, ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு நன்மையே. ஆனால், அதனை, இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்களின் நண்பர்களாக பெரு முதலாளிகளின் நலனை மட்டும் முன்னிறுத்தி நிகழ்த்தும் போதுதான் அச்சப்பட வேண்டியிருக்கின்றது.

தென் இலங்கையைப் பொறுத்தளவில் எப்போதுமே, தமிழ் நாட்டுக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கும் நிலத்தொடர்பைப் பேணுவதை அச்சுறுத்தலாக உணர்ந்து வந்திருக்கிறது. அது, மகாவம்சம் அவர்களுக்கு வழங்கியிருக்கின்ற தொடர் பயம். அதாவது, இந்தியாவில் இருந்து தென் இலங்கைக்கு தொடர்ச்சியாக படையெடுப்புக்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரலாற்றுப் பயத்தை தமிழ் மக்களுக்கு எதிராகவும் தென் இலங்கை மக்கள் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், இலங்கை இந்திய நிலத்தொடர்பை ஏற்படுத்தும் பாலம் அமைப்புக்கு ரணில் தவிர்ந்த தென் இலங்கை அரசியல்வாதிகளும், பௌத்த அடிப்படைவாத சக்திகளும் இணங்கும் வாய்ப்புக்கள் இல்லை. அதற்காகவே, ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்திவிட்டு, நிலத்தொடர்பை ஏற்படுத்துவது, அதாவது பாலம் அமைப்பது தொடர்பில் செயற்திட்டங்களை முன்னெடுக்க இந்தியா முயல்கின்றது.

 

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று புதன்கிழமை நடத்தியிருக்கிறார். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எண்ணத்தோடு இருக்கும் அவர், இனி வரும் நாட்களை தேர்தல் வெற்றிக்கான திட்டங்களை வகுக்கவும் செயற்படுத்தவும் செலவளிப்பார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: