சுதந்திர நாளையொட்டி, மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 140 கோடி இந்தியர்களின் உந்துசக்தியால் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அனைவருக்கும் சுதந்திர நாள் நல்வாழ்த்துகள். காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த, அளப்பரிய துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள், 'வளர்ச்சியடைந்த இந்தியா' உருவாக்கும் நோக்கில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.
140 கோடி இந்தியர்களின் உந்துசக்தியால், நாட்டின் பல்வேறு துறைகளிலும் நாடு வளர்ச்சியின் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. வரும் காலங்களிலும் இந்த வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகமான வளர்ச்சியுடன் தொடர்ந்து முன்னேறட்டும்," என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
