free website hit counter

தேசிய மருத்துவர்கள் நாள்: முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி முதல்வர் ச. ஜோசப் விஜய் சமூக வலைதளங்களில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் நாளான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula