பன்னிரு இராசிகளுக்குமான வார ( நவம்பர் 10 முதல் நவம்பர் 16 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
புதிய வாய்ப்புகளை தருகின்ற வாரம். வேலை தேடுவோருக்கு வேலை சிலருக்கு கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும்.
பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.
பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு
இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வீட்டிலே அமைதியான சூழல் ஏற்படும். பெண்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு.
புதிய வாகனம் வாங்கும் முயற்சி நன்மையை தரும். கடன் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி கிடைக்கும். சுற்றுலா செல்ல சிலருக்கு வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு
மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்க்கை துணை வியாபார வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார். விவசாய தொழிலில் ஆர்வம் காட்டுவீர்கள். தோப்புக் குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும்.
பழைய கடன்களை அடைப்பீர்கள். நில விற்பனை அமோகமாக நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீட்டில் விருந்த நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கு வழியும். அரசாங்க ஆதரவு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கு வழிவகுக்கும். பெண்களுக்கு யோகமான வாரம்.வெளிநாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு
கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
மனதில் இருந்து வந்த குழப்பம் படிப்படியாக நீங்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தொழில் துறையினர் புதிய இயந்திரங்களை அமைத்து உற்பத்தியை பெருக்கும் சூழல் அமைந்துள்ளது.மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம்.
சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.தந்தை மகன் உறவுகளில் சிக்கல்கள் வரலாம் தேவையில்லாத கோபதாபங்கள் ஏற்படலாம் என்பதால் வாதப் பிரதிவாதங்களைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: வாராகி அம்மன் வழிபாடு
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
தொழில் வருமானம் நன்றாக இருக்கும். சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு ஏற்படும் கிரக அமைப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.சிலர் அபராதங்கள் கட்ட வேண்டி இருக்கும்.
தேவையில்லாத வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், எதிலும் நிதானம் தேவை. பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். சிறு விபத்துகள் ஏற்படலாம். குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும்.பிறருடனான வீண் மனஸ்தாபங்களைத் தவிர்கவும்.
பரிகாரம்: சுதர்சனர் சக்கரத்தாழ்வார் வழிபாடு
ஜோதிடரின் சிறப்பான கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்
வியாபாரிகளுக்கு வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றிய நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு தாய் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.
அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீட்டில் விருந்த நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கு வழியும். அரசாங்க ஆதரவு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கு வழிவகுக்கும். பெண்களுக்கு யோகமான வாரம்.
பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்
நினைத்த காரியங்கங்கள் வெற்றி பெறும். செய்யும் செயல் உங்களுக்குச் சாதகமான பலனைத் தரும். எதிலும் ஊக்கமோடு செயல்படுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புண்டு.
அலுவலகத்தில் உங்கள் சொல் செயல் இரண்டும் பாராட்டப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பெண்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பேச்சு திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சியில் தாமதங்கள் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: நவம்பர் 10,11
பரிகாரம்: காளியம்மன் வழிபாடு
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை. கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: நவம்பர் 11,12,13
பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
பொருளாதாரத்தில் பின்னடைவுகள் இருக்காது. வருமானம் இருக்கும். ஏற்கனவே செலவுகள் அதிகரித்தாலும் எதிர்காலத்திற்கான முதலீட்டுச் செலவாகவே அமையும் வாய்ப்பு அதிகம். எனவே அதில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு உள்ள தடைகள் விலகும். தொழில் நன்றாக நடைபெறும்.
அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும்.பெண்களுக்கு சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.மாணவர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவம்பர் 13,14,15
வழிபாடு: தெட்சிணாமூர்த்தி வழிபாடு
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்
வேலை செய்பவர்களுக்கு திடீர் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.பெண்களுக்கு கடன் விடயத்தில் கவனம் தேவை.
திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர். மறுவிவாக முயற்சி பலிக்கும்.புத்திர பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்திருமண முயற்சிகளில் கவனம் தேவை. இந்த வாரத்தில் அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : நவம்பர் 15,16
பரிகாரம்: ராஜராஜேஸ்வரி வழிபாடு
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார் கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.சகோதரர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகள் பெறுவார்கள்.
வழிபாடு: ஐயப்பன் வழிபாடு
4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : +919941387054, +916380820592 . மின்னஞ்சல் முகவரி:
