free website hit counter

வார ராசிபலன்கள் - ( மார்ச் 24 முதல் மார்ச் 30 வரை )

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னிரு இராசிகளுக்குமான வார ( மார்ச் 24 முதல் மார்ச் 30 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

இந்த வாரம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.இந்த வாரம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு

இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 24

பரிகாரம்: விநாயகர் வழிபாடு

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் - மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். ஆனாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட  குறைவாக இருக்கும். கடையை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.கலைஞர்களுக்கு பண வரவில் தாமதம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 24,25,26

பரிகாரம்: காளியம்மன் வழிபாடு

கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

உங்கள் செயல்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். தொழில் முதலீடுகளில் யோசித்து செயல்படுவதுடன் உடல் நிலையில் கவனம் தேவை.பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு சங்கடங்கள் உண்டாகும். குடும்பத்தில் திடீர் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கை அரசாங்க ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.
பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.சகோதர வழியில் நன்மை உண்டு.

சந்திராஷ்டமம்: மார்ச் 26,27,28

பரிகாரம்: பைரவர் வழிபாடு

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

குடும்ப உறவுகளில் அப்போது சிக்கல்கள் தலை காட்டும். கொடுக்கல் வாங்கல்களில் தகராறுகள் வரலாம். புதியவர்களை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க முடியாது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். சிலருக்கு இந்த தொழில் வேண்டாம் வேற தொழில் செய்யலாம் என்கின்ற எண்ணமும் ஏற்படும்.மாணவர்களுக்கு கவனச்சிதறல் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை.பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இழுபறி நிலை சிலருக்கு ஏற்படும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 28,29,30

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு

ஜோதிடரின் சிறப்பான கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்

வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத் தேடியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும்.பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்.மாணவர்களுக்கு கவனமாக படிக்க வேண்டிய வாரம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு விசா நீட்டிப்பு தாமதமாகும். செயல்படுவது நல்லது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது அவசியம். அரசுவழி முயற்சி சாதகமாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்

உத்யோகத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வீட்டிலே அமைதியான சூழல் ஏற்படும். பெண்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி நன்மையை தரும். கடன்‌ விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி கிடைக்கும். சுற்றுலா செல்ல சிலருக்கு வாய்ப்பு உண்டு.

பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

புதிய வாய்ப்புகளை தருகின்ற வாரம். வேலை தேடுவோருக்கு வேலை சிலருக்கு கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரி அம்பாள் வழிபாடு

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் விருப்பத்தின்படி நடந்துகொள்வார் கள். அவர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்புண்டு.

பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடு

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் குறையலாம். உடன்பிறப்புகளின் வழியில் செலவு அதிகரிக்கும்.மனக்கவலை அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியில் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பெண்களுக்கு குடும்பத்தில் சில பிரச்சினை உருவாகலாம்.விலை உயர்ந்த பொருட்களை விற்க வேண்டிய சூழல் உருவாகும். குறிப்பாக தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட வாங்கிய சொத்துக்களை விற்க வேண்டியதிருக்கும்.

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இட மாறுதலுக்கான உத்தரவு வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வாரம்.வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

நிகழ்ச்சிக்குரிய தகவல்கள் கிடைக்கும். எதிரிகள் பலம் இழப்பார்கள். பணத் தேவை பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றமாக இருக்கும். 12க்கு உரிய குரு வக்ரம் பெறுவதும் நல்லது தான். முக்கிய கிரகங்கள் எதிர்மறை அமைப்பில் வலு விழப்பதால் உங்களுக்கு எதிர்பாராத சில நன்மைகள் உண்டு அஷ்டமத்தில் இதுவரை இருந்த சுக்கிரனும் பாக்கியஸ்தானத்திற்கு மாறுகின்றார். பெண்களுக்கு ஆரோக்கியம் மேம்படும் வாரம்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்.வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நன்மை உண்டு.உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: சரபேஸ்வரர் வழிபாடு

4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula