பன்னிரு இராசிகளுக்குமான வார ( பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: பிப்ரவரி 19,20,21
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு
இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
தேவையில்லாத இடையூறுகள் உண்டாகி தானாகவே மறைந்து போகும். இனம் தெரியாத மனக்கவலை இதயத்தை அழுத்தும். இரும்பு, நெருப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.விவசாய நிலங்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். பெண்களுக்கு சுபகாரியங்களில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கும்.மாணவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: பிப்ரவரி 22,23
பரிகாரம்: ராஜராஜேஸ்வரி அம்பாள் வழிபாடு
மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. செலவு அதிகரிக்கவே செய்யும்.அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தந்தை மகன் உறவுகள் சற்று பாதிக்கவே செய்யும்.புதிய யுக்திகள் மூலமாக வியாபாரத்தில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்வீர்கள். திருமணத்திற்கு சம்மதம் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்ட மங்கள நிகழ்ச்சி ஏதோ ஒரு காரணத்தால் தடைபடலாம். வியாபாரத்தில் சொல்லி அடிப்பீர்கள். பழைய கடன்கள் மள மள என்று வசூல் ஆகும். சிறு வியாபாரிகள் அபிரிமிதமான லாபத்தை பார்ப்பார்கள். அலங்கார பொருள் விற்பனை அமோக பலனை கொண்டு வரும். மாணவர்களுக்கு அற்புதமான வாரம்.வெளிநாட்டு தொடர்பு அதிகரிக்கும்.பெண்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
பரிகாரம்: நாகதம்பிரான் வழிபாடு
கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.ராகுவால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலம் உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பயணத்தின் போது எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடந்தேறும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்றவரவுகளும் உண்டு. தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய வாய்ப்புகளை பெற்று தொழில்விருத்தி செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தியோகஸ்தர்கள் புதிய பணியிட மாற்றத்தை பெறுவதற்கான சூழல் அமைந்துள்ளது.பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்திர தேர்வுகளாக இருந்தாலும் வழக்கத்தைவிட கவனமாக இருக்கவேண்டும்.பெண்களுக்கு வேலையில் முன்னேற்றம் உண்டு.வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தம்பதிகள் விட்டு கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு
ஜோதிடரின் சிறப்பான கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்
புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.
பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்
வெளிநாட்டிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கான அனுமதி பெறுவீர்கள். எதிர்பாராத வகையில் பண சேர்க்கை உண்டாகும். குடும்ப கவலை மறந்து மன நிம்மதி ஏற்படும்.எதிரிகள் பணிந்து நடப்பார்கள். பதவி உயர்வும் பாராட்டும் கிடைக்கும். பெற்றோர் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். மருத்துவ செலவு உண்டாகும். செலவுகள் கைமீறி போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் மாணவர்களுக்கு போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.
வழிபாடு: மகாவிஷ்ணு வழிபாடு
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
புதிய வாய்ப்புகளை தருகின்ற வாரம். வேலை தேடுவோருக்கு வேலை சிலருக்கு கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.
பரிகாரம்: சரபேஸ்வரர் வழிபாடு
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத் தேடியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும்.பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்.மாணவர்களுக்கு கவனமாக படிக்க வேண்டிய வாரம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு விசா நீட்டிப்பு தாமதமாகும். செயல்படுவது நல்லது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது அவசியம். அரசுவழி முயற்சி சாதகமாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை. கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
பரிகாரம்: நாகபூஷணி அம்மன் வழிபாடு
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்
பணவரவு அதிகரிப்பதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவிக்கு குழந்தை பேறு உண்டாகி இருக்கும் சேதி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கை செலவுகளைக் குறைத்து சேமிப்புகளை அதிகரிப்பது நல்லது. நீங்கள் ஆற்றிய பொதுச் சேவை காரணமாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவீர்கள். கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் கவனமாகப் படிக்க வேண்டும்.பெண்களுக்கு தோழிகள் வழியிலே நன்மைகள் கிட்டும்.கணவன், மனைவி இடையே மகிழ்ச்சியான வாரம்.கடன் விடயங்களில் கவனம் தேவை.வெளிநாடு செல்ல முயற்சி எடுப்பீர்கள்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
குடும்ப உறவுகளில் அப்போது சிக்கல்கள் தலை காட்டும். கொடுக்கல் வாங்கல்களில் தகராறுகள் வரலாம். புதியவர்களை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க முடியாது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். சிலருக்கு இந்த தொழில் வேண்டாம் வேற தொழில் செய்யலாம் என்கின்ற எண்ணமும் ஏற்படும்.மாணவர்களுக்கு கவனச்சிதறல் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை.பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இழுபறி நிலை சிலருக்கு ஏற்படும்.
சந்திராஷ்டமம்: பிப்ரவரி 17,18
பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு
- 4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: