பன்னிரு இராசிகளுக்குமான வார ( மார்ச் 2 முதல் மார்ச் 8 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு
இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)
நினைத்த காரியங்கங்கள் வெற்றி பெறும். செய்யும் செயல் உங்களுக்குச் சாதகமான பலனைத் தரும். எதிலும் ஊக்கமோடு செயல்படுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புண்டு.
அலுவலகத்தில் உங்கள் சொல் செயல் இரண்டும் பாராட்டப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பெண்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு
மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)
வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத் தேடியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும்.பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்.
மாணவர்களுக்கு கவனமாக படிக்க வேண்டிய வாரம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு விசா நீட்டிப்பு தாமதமாகும். செயல்படுவது நல்லது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது அவசியம்.
அரசுவழி முயற்சி சாதகமாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
பரிகாரம்: காளியம்மன் வழிபாடு
கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
இந்த வாரம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.
இந்த வாரம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு
சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்
உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வீட்டிலே அமைதியான சூழல் ஏற்படும். பெண்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு.
புதிய வாகனம் வாங்கும் முயற்சி நன்மையை தரும். கடன் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி கிடைக்கும். சுற்றுலா செல்ல சிலருக்கு வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: காமாட்சி அம்மன் வழிபாடு
ஜோதிடரின் சிறப்பான கணிப்பில் தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.
கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்
நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்க்கை துணை வியாபார வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார். விவசாய தொழிலில் ஆர்வம் காட்டுவீர்கள். தோப்புக் குத்தகை மூலம் வருமானம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
நில விற்பனை அமோகமாக நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீட்டில் விருந்த நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கு வழியும். அரசாங்க ஆதரவு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கு வழிவகுக்கும். பெண்களுக்கு யோகமான வாரம்.வெளிநாடு சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்: காலபைரவர் வழிபாடு
துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்
புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.
மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.
பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி வழிபாடு
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
உத்தியோகத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வீட்டிலே அமைதியான சூழல் ஏற்படும். பெண்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய உயர் கல்வியை படிப்பதற்கு வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாகன யோகம் உண்டு.
புதிய வாகனம் வாங்கும் முயற்சி நன்மையை தரும். கடன் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வழி கிடைக்கும். சுற்றுலா செல்ல சிலருக்கு வாய்ப்பு உண்டு.
பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
குடும்ப உறவுகளில் அப்போது சிக்கல்கள் தலை காட்டும். கொடுக்கல் வாங்கல்களில் தகராறுகள் வரலாம். புதியவர்களை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க முடியாது. வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். சிலருக்கு இந்த தொழில் வேண்டாம் வேற தொழில் செய்யலாம் என்கின்ற எண்ணமும் ஏற்படும்.
மாணவர்களுக்கு கவனச்சிதறல் இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை.பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் இழுபறி நிலை சிலருக்கு ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 2
பரிகாரம்: மகாலக்ஷ்மி வழிபாடு
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்
:கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.
வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 2,3,4
பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடு
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்
:சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். பேச்சு திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு எதிர்காலக் கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சியில் தாமதங்கள் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 4,5,6
பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மனதில் இருந்து வந்த குழப்பம் படிப்படியாக நீங்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தொழில் துறையினர் புதிய இயந்திரங்களை அமைத்து உற்பத்தியை பெருக்கும் சூழல் அமைந்துள்ளது.மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம்.
சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.தந்தை மகன் உறவுகளில் சிக்கல்கள் வரலாம் தேவையில்லாத கோபதாபங்கள் ஏற்படலாம் என்பதால் வாதப் பிரதிவாதங்களைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 6,7,8
பரிகாரம்: சக்கரத்தாழ்வார் வழிபாடு
4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்
உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம். ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் : +919941387054, +916380820592 . மின்னஞ்சல் முகவரி:
