free website hit counter

வார ராசிபலன்கள் - ( நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை )

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னிரு இராசிகளுக்குமான வார ( நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.

மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு

இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம். சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம்.

அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.சகோதர உறவுகளிலும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல் வாங்கல் மற்றும் பிறருடைய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 24

பரிகாரம்: கெளரி அம்பாள் வழிபாடு

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

வேலை செய்பவர்களுக்கு திடீர் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.பெண்களுக்கு கடன் விடயத்தில் கவனம் தேவை.

திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர். மறுவிவாக முயற்சி பலிக்கும்.புத்திர பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்திருமண முயற்சிகளில் கவனம் தேவை. இந்த வாரத்தில் அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 25,26,27

பரிகாரம்: லஷ்மி நாராயணர் வழிபாடு

கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம் 

ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம்.கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 27,28,29

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

கடன்விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.

வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 29,30

பரிகாரம்: தெட்சிணாமூர்த்தி வழிபாடு

ஜோதிடரின் சிறப்பான கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்

பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும்.

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்

புதிய வாய்ப்புகளை தருகின்ற வாரம். வேலை தேடுவோருக்கு வேலை சிலருக்கு கிடைக்கும். மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிலருக்கு மருத்துவ செலவுகள் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உணவு பழக்கவழக்கத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

இந்த வாரம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.

இந்த வாரம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

தொழில் வருமானம் நன்றாக இருக்கும். சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உண்டு. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு ஏற்படும் கிரக அமைப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.சிலர் அபராதங்கள் கட்ட வேண்டி இருக்கும்.

தேவையில்லாத வம்பு வழக்குகளில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், எதிலும் நிதானம் தேவை.பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். சிறு விபத்துகள் ஏற்படலாம். குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும்.பிறருடனான வீண் மனஸ்தாபங்களைத் தவிர்கவும்.

பரிகாரம்: சுதர்சனர் சக்கரத்தாழ்வார் வழிபாடு

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உதவி சிலருக்கு கிடைக்கும். கணவன் மனைவி இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து போகும். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை செல்வங்களுக்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி உண்டு.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். வாகனங்களால் திடீர் செலவு உண்டு. வியாபாரத்தில் மந்த நிலைமை மாறும். சிலருக்கு திடீர் பண வரவு உண்டு. சொத்து  வாங்க எடுத்த  முயற்சியில் வெற்றி கிடைக்கும். மன குழப்பங்கள் நீங்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்

புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண பிராப்தி உண்டாகும். ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு மக்கள் பேறு உண்டாகும். தடைபட்ட காரியங்கள் கைகூடிவரும். பந்தயங்களில் அமோக வெற்றி கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் சிறப்பாக நடக்கும்.

பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.உறவினர்களால் பணச் செலவு அதிகரிக்கும். வழக்குகள் தொல்லையைக் கொடுக்கும்.வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரி அம்பாள் வழிபாடு

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இட மாறுதலுக்கான உத்தரவு வரக்கூடும்.வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.மாணவர்களுக்கு உற்சாகம் தரும் வாரம்.வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு

4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :  +919941387054, +916380820592 . மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula