free website hit counter

வார ராசிபலன்கள் - ( ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை )

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பன்னிரு இராசிகளுக்குமான வார ( ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

மேஷம் : (அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். செய்யும் செயல் உங்களுக்குச் சாதகமான பலனைத் தரும். எதிலும் ஊக்கமோடு செயல்படுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புண்டு.

அலுவலகத்தில் உங்கள் சொல் செயல் இரண்டும் பாராட்டப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பெண்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.தம்பதிகள் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு

இடபம்:(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத் தேடியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும்.பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்.

மாணவர்களுக்கு கவனமாக படிக்க வேண்டிய வாரம். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு விசா நீட்டிப்பு தாமதமாகும். செயல்படுவது நல்லது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாகப் படித்துப் பார்ப்பது அவசியம்.
அரசுவழி முயற்சி சாதகமாகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு

மிதுனம்: (மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்)

இந்த வாரம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.

இந்த வாரம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

பரிகாரம்: சிவபெருமான் வழிபாடு

கடகம்: புனர்பூசம் 4 - ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

மனதில் இருந்து வந்த குழப்பம் படிப்படியாக நீங்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். தொழில் துறையினர் புதிய இயந்திரங்களை அமைத்து உற்பத்தியை பெருக்கும் சூழல் அமைந்துள்ளது.மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம்.

சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.தந்தை மகன் உறவுகளில் சிக்கல்கள் வரலாம் தேவையில்லாத கோபதாபங்கள் ஏற்படலாம் என்பதால் வாதப் பிரதிவாதங்களைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: ஆஞ்சனேயர் வழிபாடு

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்

பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும்.

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: மகாவிஷ்ணு வழிபாடு

ஜோதிடரின் சிறப்பான கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.

பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும்.விற்பனை சுமாராக தான் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு திருப்தியான வாரம். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும்.

பரிகாரம்: சரஸ்வதி வழிபாடு

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்

புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண பிராப்தி உண்டாகும். ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு மக்கள் பேறு உண்டாகும். தடைபட்ட காரியங்கள் கைகூடிவரும். பந்தயங்களில் அமோக வெற்றி கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் சிறப்பாக நடக்கும்.

பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனைக் கொடுக்கும்.உறவினர்களால் பணச் செலவு அதிகரிக்கும். வழக்குகள் தொல்லையைக் கொடுக்கும்.வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்.நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மன் வழிபாடு

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை

புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் ஏற்படும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.பெண்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு.மாணவர்களுக்கு சோர்வு ஏற்படும்.

வெளிநாட்டு வாய்ப்பு சிலருக்கு கை நழுவி போகும். அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். முதலாளியின் பாராட்டல் தனியார் துறை ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.சிலருக்கு வாகன யோகம் உண்டாகும்.

பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடு

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

வியாபாரிகளுக்கு வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பிள்ளைகளுடைய எதிர்காலம் பற்றிய நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு தாய் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.மாணவர்கள் போட்டி தேர்வில் தேர்ச்சி அடைவார்கள்.சுப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வீட்டில் விருந்த நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கு வழியும். அரசாங்க ஆதரவு புதிய ஒப்பந்தங்கள் பெறுவதற்கு வழிவகுக்கும். பெண்களுக்கு யோகமான வாரம்.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரி வழிபாடு

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்

மூன்றாம் நபர் ஆலோசனை குறித்து அதிக விழிப்புணர்வு தேவை. குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் ஏற்படலாம். சகோதர உறவுகள் தேவையற்ற தொல்லைகளைத் தரலாம். புதிய முதலீடுகள் இப்பொழுது வேண்டாம். யாருக்கும் நீங்கள் ஜாமீன் இருக்க வேண்டாம்.

அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்.சகோதர உறவுகளிலும் எச்சரிக்கை தேவை. கொடுக்கல் வாங்கல் மற்றும் பிறருடைய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஜுன் 30, ஜுலை 1

பரிகாரம்: கெளரி அம்பாள் வழிபாடு

கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்

வேலை செய்பவர்களுக்கு திடீர் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.பெண்களுக்கு கடன் விடயத்தில் கவனம் தேவை.

திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர். மறுவிவாக முயற்சி பலிக்கும்.புத்திர பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்திருமண முயற்சிகளில் கவனம் தேவை. இந்த வாரத்தில் அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: ஜுலை‌ 2,3,4

பரிகாரம்: லஷ்மி நாராயணர் வழிபாடு

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம்.கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டுச் செய்வது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.

சந்திராஷ்டமம்:ஜுலை 5,6

பரிகாரம்: சரபேஸ்வரர் வழிபாடு

4தமிழ்மீடியாவுக்காக: ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார்

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :  +919941387054, +916380820592 . மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula