free website hit counter

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து CID மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முடித்த பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் வாக்களிக்க வருகை தரும் போது வாக்களிப்பு நிலையங்களில் அனுமதிக்கப்படாத பொருட்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ரத்மலே திஸ்ஸ மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய கண்காணிப்பாளர் உட்பட மூவரை பணி இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (MoE) அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த காலக்கெடுவிற்குப் பின்னர் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்படும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் கீழ் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு நிலையான நடைமுறைகளுக்கு அமைவாக கட்டண அடிப்படையில் மட்டுமே விமானங்களை வழங்குவதாக இலங்கை விமானப்படை (SLAF) தெளிவுபடுத்தியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: