free website hit counter

இன்று (26) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம், முன்னைய முறைமையின் கீழ் வீசா வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2024/25 மகா பருவத்திற்கான நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை ஹெக்டேர் ஒன்றிற்கு ரூபா 15,000 இலிருந்து ரூபா 25,000 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் குழுக்களும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பு மனுவில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இலங்கை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய மூன்று பேர் கொண்ட அமைச்சரவை சற்று முன்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

புகழ்பெற்ற கல்வியாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரான NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிரதமராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: