free website hit counter

அதிமுகவை சேர்ந்த அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.பி. சுகுமார் என்பவர் வேலூர், சத்துவாச்சாரி,காகிதப்பட்டறை, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அரசு பணி வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் ரூ. 2லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு அதிகபட்ச மதிப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

பெங்களூரில், சாலையோர நடை பாதையில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் மகன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பிய காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.

இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: