In The Spotlight
இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை சீனா விரைவில் நாட்டிற்கு வழங்கும் என்று கூறுகிறார்.
மக்களை அச்சுறுத்தி, மிரட்டி, மகா சங்கத்தினரை அவமதித்து, அரசு அதிகாரிகளை, சட்டமா அதிபர் துறையை மற்றும் நீதித்துறையை பயமுறுத்தி ஒரு அரசாங்கத்தை நடத்த முடியும் என்று NPP அமைச்சர் கே.டி. லால் காந்தா நினைத்தால், அது வெறும் கனவு மட்டுமே என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி, பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், “திமுக ஆட்சியை வழியனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.” என்று தெரிவித்து இருந்தார்.
-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு. -
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
Top Stories
தமிழகத் தேர்தல்களம் இம்முறை வலுவான மும்முனைப் போட்டிக்களமாக மாறும் சாத்தியங்கள் உருவாகி வருகின்றனவா?. தமிழக தேர்தல் களத்தில், இந்தியப் பிரதமரின் தமிழக வருகையுடன், அதிமுக, பாஜகவும், அவற்றுடன் இணைந்த ஏனைய கட்சிகளுடனும் கூடிய பலமான தேர்தல் கூட்டணியும் உருவாகியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், மின்சாரத்தால் இயங்கும் 100 நவீன சொகுசு பேருந்துகளை சீனா விரைவில் நாட்டிற்கு வழங்கும் என்று கூறுகிறார்.
மக்களை அச்சுறுத்தி, மிரட்டி, மகா சங்கத்தினரை அவமதித்து, அரசு அதிகாரிகளை, சட்டமா அதிபர் துறையை மற்றும் நீதித்துறையை பயமுறுத்தி ஒரு அரசாங்கத்தை நடத்த முடியும் என்று NPP அமைச்சர் கே.டி. லால் காந்தா நினைத்தால், அது வெறும் கனவு மட்டுமே என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி, பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், “திமுக ஆட்சியை வழியனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.” என்று தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதனால், இந்த முறை நான்கு முனைப் போட்டி ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
Top Stories
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க இன்று காலை தனி நீதிபதி பி. டி. ஆஷா உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது.
பார்வைகள்
1988 ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு இலங்கையிலிருந்து வந்த ஒரு ஈழத்து அகதி. வாழ்வின் எந்த நம்பிக்கைகளும் தொற்றிக் கொள்ளாத நிலையிலிருந்த ஒரு ஈழத் தமிழ்மகன், இன்று சுவிற்சர்லாந்தின் ஒரு பெருநகரின் அதி உயர்பதவியான தலைவர் பதவியில் அமர்ந்திருக்கின்றார்.
இயற்கைப்பேரிடர் இலங்கை முழுவதையும் மொத்தமாகத் தாக்கியதில், இலங்கை மக்கள் மட்டுமன்றி, அரசும் அதிர்ச்சிக்கு உள்ளாகித்தான் போனது. ஆனாலும் அரச நிர்வாகம் வெகுவேகமாகப் புறச்சூழலுக்குத் தயாரானது. இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரும் பேரிடர்.
1971 ஆண்டு. "சேகுவேரா இயக்கம், அரசுக்கு எதிராக பொலிஸ்டேசன்களை எல்லாம் அடிச்சுப் பிடிக்குதாம் " என்றே 'ஜேவிபியின் ஏப்ரல் கிளர்ச்சி' தாக்குதல்களை, இலங்கையின் தமிழ்ப்பகுதி மக்கள் வர்ணித்துக் கதைத்தார்கள். வெகு வேகமாகப் பரவிய ஜேவிபியின் தாக்குதல்கள் தொடங்கிய வேகத்திலேயே இலங்கை அரசால் முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது.
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
வாசகசாலை
உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ம் ஆண்டுக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. ஆனால் அங்கே எழுந்த கேள்விகளுக்கும், குரல்களுகளுக்குமான பதில்களுக்கும், செயல்களுக்குமான காலம் இனி வரும் காலமே.
பெருமையுடள் அடையாளப்படுத்தக் கூடிய பல இளைய முகங்களில், அண்மைக்காலத்தில் பலரது கவனம் பெற்றிருக்கும் மூன்று இளையவர்கள் குறித்த ஒரு பார்வை இது. டிஷாதனா, வஜ்ரா, சத்யா, இந்த மூன்று இளையவர்களும் ஒவ்வொருவகையில் ஈழத்தின் மகள்களாக முகங்காட்டுகின்றார்கள்.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் எழுத நினைத்திருந்த எண்ணங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டது, சுவிற்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பகுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நடந்த பெரும் தீவிபத்து.
சென்னை மயிலாப்பூர் மாட வீதியில் அமைந்துள்ள பயணியர் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதுதான் அந்த அதிகாலை பஜனை எம் காதுகளை எட்டியது. விடுதி ஊழியர்களிடம் விசாரித்த போது,
நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.
ஈழத்தின் முக்கியமான கலை ஆளுமையான ஓவியர்,சிற்பி, ரமணி மறைந்தார். யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (ரமணி) ஈழத்தின் படைப்புலகத்தில் நன்கு அறியப்பட்டவர்.
ரதசப்தமி என்பது இந்து சமயத்தில் மிகுந்த புனிதத்தையும் ஆன்மீக மகத்துவத்தையும் கொண்ட ஒரு முக்கியமான பண்டிகையாகும். ரத சப்தமி (Ratha Saptami) இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும்.
காலச்சக்கரம் தரும் சங்கடத்தால் எல்லாவற்றிலிருந்தும் விலகி தனித்துவிட்டால் நிம்மதி கிடைத்துவிடுமா? விலகி செல்பவர்கள் வாழ்க்கையின் விளக்கத்தை புரிந்தார்களா? புரிந்து மீண்டும் தம்மை புதுப்பித்துக்கொள்பவர்கள் என்னைப்பொருந்தவரையில் அபூர்வசாலிகள்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை ரசிகர்கள் ஜன.6 இன்று கொண்டாடிவருகின்றனர்.
