free website hit counter

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக இடைநிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொடர்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்; சீனாவில்தான் முதன்முதலில் இவ் வைரஸ் கண்டறியப்பட்டதாக தான் முன்பு கூறிய கூற்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

20 வருடங்களுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துருப்புக்கள் தற்போது படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, பெரு நாட்டில் அதன் கோவிட் இறப்பு எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி அறிவித்துள்ளது.

மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 8000 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டதை அடுத்து அங்கு ஜூன் 1 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

மியான்மாரில் பெப்ரவரியில் ஏற்பட்ட இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின் நிகழ்ந்த பொது மக்களின் எதிர்ப்புப் போரட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டதில் சுமார் 800 பேருக்கும் அதிகமான மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

மற்ற கட்டுரைகள் …