கொரோனா வைரஸின் டெல்டா திரிபினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் அதிகரிக்க கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்துக்கு மீண்டும் தடை!
இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிற்கு விசேட தடுப்பூசித் திட்டம்; இரு மாதங்களுக்குள் முன்னெடுப்பு!
வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மருதானை பொலிஸ் காவல்நிலையத்தில் தீ !
இலங்கைத் தலைநகர் பொழும்பிலுள்ள மருதானைப் பகுதி பொலிஸ் காவல் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலும் டெல்டா மாறுபாடு !
கொரோனா வைரஸின் இந்திய மாறுபாடான டெல்டா வைரஸ் திரிபு யாழ்ப்பாணத்திற்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொற்றும் வேகம் அதிகமான, டெல்டா மாறுபாடு, இலங்கையில் இதுவரை கொழும்பில் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருந்தது.
இலங்கை முழுவதும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது !
இலங்கையில் நடைமுறையிலுள்ள கோவிட்- 19 பாதுகாப்பு நடைமுறைத் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்ள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புக்குப் பயணித்த யாழ். பேரூந்து பாதிவழியில் திருப்பி அனுப்பப்பட்டது !
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இந்தப் பேரூந்தில் பயணித்தவர்களில் பலரும், அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களாக இருந்தமையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.