free website hit counter

சஜித்தின் அரசாங்கத்தின் கீழ் மீண்டும் இவ்வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்படும் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் கீழ் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய எம்.பி., ஜயசேகர, தேர்தலின் பின்னர் மீண்டும் பரீட்சை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் சாதாரண பரீட்சையை நடத்த முடியாவிட்டால் எவ்வாறு நாட்டை ஆள முடியும் என அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

"ரணில் விக்கிரமசிங்க தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தேர்தல் முடிவடைந்தவுடன், தற்போது நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பெறுபேறுகளை இடைநிறுத்துவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தலைமையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதனை மீள நடத்துவோம். புதிய அரசாங்கம் எமது தரம் 05 பாடசாலை மாணவர்களுக்கு நீதி வழங்கும்” என அவர் மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: