free website hit counter

கட்டண அடிப்படையில் மட்டுமே ஜனாதிபதி பிரச்சாரங்களுக்கு விமானங்கள் வழங்கப்படுகிறது: விமானப்படை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கு நிலையான நடைமுறைகளுக்கு அமைவாக கட்டண அடிப்படையில் மட்டுமே விமானங்களை வழங்குவதாக இலங்கை விமானப்படை (SLAF) தெளிவுபடுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக விமானப்படை விமானங்களை தவறாக பயன்படுத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) சமீபத்தில் குறிப்பிடத்தக்க கவலையை தெரிவித்தது. ஜனாதிபதி வேட்பாளர்களால் பிரச்சார நோக்கங்களுக்காக SLAF விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஆனால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பணம் செலுத்திய பின்னரே பல முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்கள் SLAF விமானங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என விமானப்படையின் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula