free website hit counter

பீகார் இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்லக்கூடாது ; சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றார்.

தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த அமைச்சர் கே.என். நேருவின் மகன், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இருவரும் ஒரே மேடையில் இணைந்து நின்றனர்.

தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியை ஒதுக்க, இந்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் வேறுபல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை, இடைக்காலத் தீர்வாக அதனை 99 ஆண்டுகளுக்கு  குத்தகையாகப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளால் ஏறத்தாழ 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …