free website hit counter

புதுடெல்லி: தமிழக மீனவர்களின் விவகாரத்தை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் உள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர், 11 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் (ராஜ்யசபா) தெரிவித்தார்.

திருவனந்தபுரம்: பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் சிலர் ஆத்திரத்தில் ஆசிரியரின் காரில் பட்டாசுகளை கொளுத்திப் போட்ட சம்பவம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியா 254 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது, இதன் மூலம் உலகின் இரண்டாவது அதிக ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியா இலங்கையை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2024 ஆம் ஆண்டில் கென்யா 500 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்தது.

தமிழ்நாட்டில், ராமேஸ்வரம் அருகே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த தகவலை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு சென்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கும் என்று இதன்மூலம் தெரிகிறது.

இந்தியாவில் பண விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது என்று,  உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …