free website hit counter

Ula

Top Stories

2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாரிஸ் நகரில் 26.07.24 வெள்ளி இரவு கோலாகலமாக ஆரம்பமாகின.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (26) தமது பண வைப்புத் தொகையை சமர்ப்பித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள வாகன சாரதிகளுக்கு இந்த வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும்  செயற்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை கூடிய தமிழ் சிவில் சமூகக் கட்டமைப்பினர், தங்களை 'தமிழ் மக்கள் பொதுச்சபை'யாக அடையாளப்படுத்தி அறிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவது தொடர்பிலான உரையாடல் களம், தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற சிவில் சமூக அமைப்பொன்றை ஆரம்பிப்பதற்கான காரணியாக இருந்திருக்கின்றது என்பதை ஆரம்பத்திலேயே வரவேற்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பிலான பொது விவாதமொன்று எதிர்வரும் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருக்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் அரசியல் பத்தியாளர்கள் சிலருக்கும் சுமந்திரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை, பொது விவாதமாக நடத்தி ஆராய்வோம் என்று இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது.

Ula

Top Stories

நீங்கள் தற்செயலாக ஆர்வமெடுத்து பார்த்த திரைப்படங்களுக்கு திரைப்பட விழாவின் இறுதி நாளில் விருதுகள் கிடைப்பது ஒரு மிகப்பெரும் மகிழ்ச்சி. திரைப்பட விழாக்களுக்கு ஊடகவியலாளராக, திரைப்பட விமர்சகராக செல்லும் எவரையும் கேட்டுப்பாருங்கள். அதை அதிகம் அனுபவித்தவர்கள் அவர்களாகவே இருப்பார்கள்.

சுவிற்சர்லாந்தின் நியோனில்,  58 வது, Visions Du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழா தொடங்கியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில், ஆவணத்திரைப்படங்களுக்கு மட்டுமென இருக்கும் திரைப்பட விழாக்களில் முதன்மையானது இத்திரைப்படவிழா.

ஒரு தாய் தோட்டத்தில் தன் குழந்தைக்கு அழகான மலர்களைக் காட்டி ரசித்துக் கொண்டிருப்பாள்,  அந்த அழகிய மலரின் செந்நிறம் திரையில் விரியும் போது எழும் பின்னணி இசையும் உயரும்.

அகடமி விருதுகள் எனும்ஆஸ்கார் விருதுகள் விழாவின் 96வது பதிப்பு,  கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நேற்று மார்ச் 10ந் திகதி நடைபெற்றது. இதில், கிறிஸ்டோபர் நோலனின் "ஓப்பன்ஹைமர்", சிறந்த படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட ஏழு விருதுகளை வென்றது. 

Top Stories

Grid List

கசகஸ்தான் நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவில் மிகப் பாரியளவில் மீத்தேன் வாயு கசிவாகி வந்துள்ளமை, நவீன செய்மதி ஒன்றின் மூலம் வேவு பார்க்கப் பட்டு உறுதி செய்யப் பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட  இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.

யானைகள் இனத்தில் ஒரு யானை இன்னொரு யானையை பெயர் சூட்டி அழைக்கும் வல்லமை உள்ளதாம்.

நேற்றைய தினத்திலிருந்து சூடு பிடித்திருக்கும் அடுத்த ட்ரெண்ட் பாடலான "மக்காமிஷி"; ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ளது.

4tamilMedia