free website hit counter

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க வீரராக வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்து, சுனில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் கேஎல் ராகுல்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தெரிவு செய்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால், கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை சேர்த்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில் மயன்க் அகர்வால் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். புஜாரா டக் அவுட்டானார். கோலி 35 ரன்னில் ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் சதமடித்தார். இது கேஎல் ராகுலின் 7வது டெஸ்ட் சதம். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடக்க வீரர் ராகுலுக்கு இது 7வது டெஸ்ட் சதம். இந்த டெஸ்ட்டில் அடித்த சதத்தின் மூலம் அபாரமான சாதனை படைத்துள்ளார் ராகுல். ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கருக்கு (15) அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் கேஎல் ராகுல் (5 சதங்கள்).

ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 4 சதங்கள் அடித்த வீரேந்திர சேவாக் 3ம் இடத்தில் உள்ளார். சேவாக்கை விட ஒரு சதம் அதிகமாக அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசியாவிற்கு வெளியே அதிக சதங்கள் அடித்த தொடக்க வீரர்கள் பட்டியலில் கவாஸ்கருக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை பிடித்துள்ளார் கேஎல் ராகுல். 

5 அணிகள் பங்கேற்ற 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பங்காளதேச தலைநகர்

இரண்டாவது லங்கா ப்ரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், கோல் க்ளடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்னா கிங்ஸ் அணி மோதவுள்ளது.

தம்புள்ள ஜயண்ட்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டியில், 23 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், அவிஸ்க பெர்னாண்டோ அதிகபட்சமாக 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 70 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 211 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய தம்புள்ள ஜயண்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சாமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்கா அதிகபட்சமாக 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இரண்டாவது லங்கா ப்ரமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணிகள் நாளை மோதவுள்ளன.

முதலாவது லங்கா ப்ரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதிய நிலையில், ஜப்னா அணி சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.

தான் கடந்து வந்த கடினமான பாதை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: