free website hit counter

வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள வலிமை படம் வெளியாகயிருக்கிறது.  மழை, வெள்ளத்தில் தமிழ்நாடு மிதந்தாலும் வலிமை படத்துக்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெறித்தமான அன்பை அவர் மீது பொழியும் அவரது ரசிகர்கள், அஜீத்தை அனைவரும் செல்லமாக ‘தல’ என்றுதான் அழைப்பார்கள். இந்த ‘தல’ என்ற சொல்லை வைத்து “எவன்டா தல..?” என்று நடிகர் விஜய், தன்னுடைய ஒரு படத்தில் கேள்வியெழுப்புவதைப் போல கிண்டல் செய்திருந்தார். இதையடுத்து இன்னும் தீவிரமாக ‘தல’ என்ற பெயரை ட்ரெண்ட் செய்தனர் அவரது ரசிகர்கள். இன்னொரு பக்கம் இதே ‘தல’என்கிற பட்டத்தை தோனிக்கும் கொடுத்து அவரையும் அழைத்து வந்தனர் சி.எஸ்.கே. அணியின் ரசிகர்கள்.

இதனால் இந்த ‘தல’ என்ற பெயருக்குப் பொருத்தமானவர் யார் என்கிற போட்டி எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக தோனி ரசிகர்களுக்கும், அஜீத்தின் ரசிகர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தன. இந்த அரட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் அஜீத் ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இனிமேல் தன்னைக் குறிப்பிடும்போது வெறுமனே நடிகர் அஜீத்குமார் அல்லது அஜீத் என்று குறிப்பிட்டாலே போதும். வேறு எந்தப் பட்டப் பெயரையும் பயன்படுத்த வேண்டாம்” என்று தன்னுடைய ரசிகர்களையும் ஊடகத்தினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

“ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதோ, அல்லது என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும்போதோ என் இயற் பெயரான அஜித்குமார், மற்றும் அஜித் என்றோ எல்லது ஏ.கே. என்றோ குறிப்பிட்டால் போதுமானது.‘தல’என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக ‘தல’ என்ற அடைமொழியை அவர் தோனிக்கு விட்டுக் கொடுத்துவிட்டார் என்று புரிந்துகொள்ளலாம்.
 
 
 
 
 
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ReplyReply allForward

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் 'த்ருஷ்யம் 2'.

கோவாவில் நடைபெற்றுவரும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்னிந்திய சினிமாவின் வசீகரமான கதாநாயகியாக  வலம் வருபவர் சமந்தா ரூத் பிரபு. பாலிவுட்டில்

லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ 'மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ 'டிக்கிலோனா' , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட

'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தில் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.

ஆர்யாவுக்கு பெயர் பெற்றுக்கொடுத்த படங்களில் ஒன்று ‘டெடி’. அதை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்தார்.

தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர், நடிகர் பார்த்திபன் தன்னுடைய 60-வது பிறந்த நாளை நேற்று ஒரு பார்ட்டியாக கொண்டாடினார்.

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேள்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரைபிரபலங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: