free website hit counter

Sidebar

20
வெ, ஜூன்
35 New Articles

தலிபான்கள் ஆட்சியில் தம்மை நிலைப் படுத்திக் கொள்ள இயலாத வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதை உறுதி செய்யும் இறுதித் தினமாக ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றாக வாபஸ் பெறும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு கடும் சவாலாக விளங்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த போராளிக் குழுவுடன் யுத்தம் செய்வதை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் தலிபான்கள் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறினாலும் அந்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இப்போது ஃபைசர் தடுப்பூசிகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நியூசிலாந்தில் ஏற்கனவே அமுல் படுத்தப் பட்ட நாடு தழுவிய லாக்டவுனானது குறைந்தது வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நைஜீரியாவில் சமீபத்தில் தாம் கடத்திய 121 மாணவர்களில் 15 பேரை பெற்றோரிடம் பணயத் தொகை பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளனர் அங்கிருக்கும் தீவிரவாதிகளில் சிலர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றி தலிபான்கள் ஆட்சிக்கு வந்து 1 வாரத்துக்கும் அதிகமாகி உள்ள நிலையில் தமது தேசத்தை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்திற்கு இன்னமும் பல ஆயிரக் கணக்கான ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் முற்றுகையிட்டு வருகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …