சனிக்கிழமை இந்தோனேசியாவின் மிகப் பெரும் தீவான ஜாவாவில் அமைந்துள்ள செமெரு என்ற உயிர் எரிமலை சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறியதுடன் லாவா குழம்பையும் கக்கத் தொடங்கியுள்ளது.
ஜேர்மனியின் மூனிச் நகரில் 2 ஆம் உலகப் போர் குண்டு வெடித்ததில் 4 பேர் காயம்!
புதன்கிழமை ஜேர்மனியின் மூனிச் நகரின் மிகவும் இயங்கு நிலையில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகே ஒரு கட்டுமானப் பகுதியில், நிலத்துக்குக் கிழ் இருந்த 2 ஆம் உலகப் போரின் போது போடப் பட்ட வெடிகுண்டு ஒன்று தற்செயலாக வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
உலகின் புதிய குடியரசாக மலர்ந்தது பார்படோஸ்!
சுமார் 396 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்த கரீபியன் தீவு நாடான பார்படோஸ் திங்கட்கிழமை நள்ளிரவு நடைபெற்ற கையளிப்பு வைபவத்தின் பின்னர் உலகின் புதிய குடியரசு நாடாக மலர்ந்துள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு! : 3 பேர் பலி
புதன்கிழமை அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் 15 வயது மாணவர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப் பட்டும், 8 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
இன்கா நாகரிகத்துக்கு முந்தைய பழமையான மம்மி கண்டுபிடிப்பு!
பெரு தலைநகர் லிமாவின் கிழக்கே கஹமர்கீலா என்ற இடத்தில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று அகழ்வாராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத் தடை மோசமான நடவடிக்கை! : WHO
உலகை சமீப காலமாக அச்சுறுத்தி வரும் கோவிட் இன் புதிய வீரியம்மிக்க திரிபான ஒமிக்ரோன், தென்னாப்பிரிக்காவில் முதலில் இனம் காணப் பட்ட காரணத்தினால் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு முழுமையான விமானப் போக்குவரத்துத் தடைகளை உலக நாடுகள் விதிப்பது அபத்தமானது என உலக சுகாதாரத் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை கவலை தெரிவித்துள்ளது.
உலகை மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்டின் மிக வீரியமான ஒமிக்ரோன் திரிபு!
தென்னாப்பிரிக்காவில் அறியப் பட்டு மிக வேகமாகப் பரவி வரும் கோவிட் வைரஸின் நவீன மிக ஆபத்தான திரிபான ஒமிக்ரோன் இன் பரவல் சில ஐரோப்பிய நாடுகளில் அறியப் பட்டதை அடுத்து, தடுப்பூசிகள் பெரும்பான்மையாகப் போடப் பட்ட நாடுகளாக இருந்தாலும், பல ஐரோப்பிய நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப் படுத்தத் தொடங்கியுள்ளன.