free website hit counter

வியாழக்கிழமை உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடெனும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர்.

தாய்வான் விவகாரத்தில் தனது செயற்பாடுகளுக்கு அமெரிக்கா கடும் விலையைக் கொடுக்க நேரிடும் என சீனாவின் மாநில கவுன்சிலரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ வியாழக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மிக வேகமாகப் பரவும் தனது தன்மை காரணமாக கோவிட்-19 இன் ஒமிக்ரோன் மாறுபாடானது தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.

ஐரோப்பிய நாடான கிறீஸில் புதன்கிழமை காலை 6:08 மணிக்கு 5.7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் க்ரிட்டி என்ற தீவை மையமாகக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் ஊடகப் பேட்டியின் போது உக்ரைன் விடயத்தில் தமது நிலைப்பாட்டை உறுதிப் படுத்த மேற்குலகம் தவறினால் தனக்கான தேர்வுகளில் தான் நிச்சயம் கடும் போக்கைக் கடைப் பிடிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட மியான்மாரின் முன்னால் அரச தலைவி ஆங் சான் சூகி மீதான புதிய விசாரணை அடிப்படையிலான தீர்ப்பு ஜனவரி 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

உலகம் முழுதும் டெல்டா மாறுபாட்டை விட 3 மடங்கு வேகமாகப் பரவுவதாகக் கருதப் படும் ஒமிக்ரோன் கொரோனா திரிபானது அச்சுறுத்தி வரும் நிலையில், அவுஸ்திரேலியாவில் சனச்செறிவு அதிகமாக உள்ள மாநிலமான நியூசவுத்வேல்ஸ் இல் முதலாவது ஒமிக்ரோன் இறப்பு பதிவாகியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …