free website hit counter

வெள்ளிக்கிழமை இரவு மத்திய மற்றும் கிழக்கு சீனாவை அடுத்தடுத்து தாக்கிய டோர்னிடோ சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 10 பேர் கொல்லப் பட்டும், 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு கிழக்கு ஜெருசலேமில் அருகருகே வசிக்கும் யூதர்களுக்கும், இஸ்லாமிய பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து குறித்த பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அடுத்து அரசு என்னென்ன கொரோனா பாது காப்புவிதிகளை தளர்த்தும் ? எனும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.