free website hit counter

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் கசிந்த மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெள்ளம், வரட்சி மற்றும் காட்டு யானைகளினால் யால பருவத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை லங்கா சால்ட் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.நந்தன திலக்க, உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பீதியடைந்து உப்பை வாங்கி பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸார் விசேட போக்குவரத்து நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

சமகி ஜன பலவேகய (SJB) கூட்டணி தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதன் சின்னத்தில் போட்டியிடும் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இந்திய முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

நேற்று தனது 92வது வயதில் காலமான இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இலங்கையின் மூத்த அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: