free website hit counter

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருகோணமலையில் கிழக்கு மாகாண கலாச்சாரப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியினால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள்தொகையில் கணிசமான வீழ்ச்சியை சந்திக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் சனத்தொகை பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்தார்.

ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அனைத்து ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ முதலில் அறிவிப்பதா என்ற குழப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் தடகளப் போட்டியில் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் 5000 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த திருமதி அகிலா திருநாயகி அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கும் பெருமையைப் பெற்றார்.

இந்த வருடத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 25,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை தனது முதல் ஜல்லிக்கட்டை திருகோணமலையில் நடத்தியதுடன், நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன் முருகன் சனிக்கிழமை நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: