free website hit counter

மைத்திரியை கைது செய்யுங்கள்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியை பொலிசார் உடனடியாக விசாரிக்க வேண்டும் என எம்.பி கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய முழு உலகமும் காத்திருக்கிறது. எனவே, அனைத்து விவரங்களையும் சிறிசேன வெளிப்படுத்த வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

சிறீசேனாவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து இலங்கையில் உள்ள தேவாலயத் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: