free website hit counter

அண்மையில் ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை கடுமையாக சாடிய சமகி ஜன பலவேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச, ஊடகக் கதைகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் இருந்து பின்வாங்குமாறு திஸாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார்.

பொதுத் தேர்தலை அடுத்து வெளிவரவுள்ள அரசாங்கத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அப்படியே இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இலங்கையர்களுக்கு வளமான நாடு மற்றும் அனைவருக்கும் நிறைவான வாழ்வு என்ற நம்பிக்கையை உணர வேண்டுமானால், கலாசார, அரசியல் மற்றும் மனோபாவ மாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளும் நவம்பர் 01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: