free website hit counter

கார்த்தியின் முகத்திரையை விலக்கிய ஜெயம் ரவி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது கல்கியின் பொன்னியின் செல்வன்.

தற்போது, இப்படத்தின் படபிடிப்பு குவாலியர் கோட்டையில் நடந்து வருகிறது. படத்தின் இறுதி கட்டத்திற்கு படப்பிடிப்புக்குழு வந்துள்ளனர். இன்று, இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் தனது பகுதிகள் எடுத்து முடிகப்பட்டுவிட்டதால் அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி சென்னை திரும்பியிருக்கிறார். இதை தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஜெயம் ரவி, அவர் தன்னுடைய பதிவில், “பொன்னியின்செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படப்பிடிப்பை முடித்துவிட்டேன். மணி சாரின் காமடி சென்சும், என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்”என்று தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியின் இந்தப் பதிவைப் படித்த கார்த்தி, அதற்கு பதில் கூறுவதுபோல் “இளவரசே @actor_jayamravi நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். இப்படிக்கு.. - வந்தியத்தேவன்" என்று ட்விட் வழியாகவே கார்த்தி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தில் தனது கதாபாத்திரம் வந்தியதேவன் என்பதை உறுதி செய்துள்ளார். ஜெயம் ரவி - கார்த்தி ஆகிய இருவருடைய இந்தப் பதிவுகளையும் ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக குந்தவை வேடத்தில் நடிக்கும் த்ரிஷாவுடன் கார்த்தியும் ஜெயம் ரவியும் எடுத்துகொண்டுள்ள புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction