free website hit counter

மருத்துவமனையில் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இப்போது வரை தனுஷின் வாழ்க்கைத் துணையாகத் தொடரும் ஐஸ்வர்யா சில
வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமாகி வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிந்துள்ள ஐஸ்வர்யா ‘இந்த வாழ்க்கை கோவிட்டுக்கு முன் மற்றும் கோவிட்டுக்கு பின்… காய்ச்சல், தலை சுற்றல் மற்றும் சோர்வு காரணமாக மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் அழகான மற்றும் ஆற்றலும் கொண்ட மருத்துவர்கள் உங்களை சந்திப்பதும் அவர்களோடு நீங்கள் நேரத்தை செலவிடுவதையும் நினைத்தால் உங்களால் மோசமாக உணர முடியாது. அதிலும் பெண்கள் தினத்தின் மாலையில் மருத்துவர் பிரீத்தியை சந்திப்பது என்ன மாதிரியான தொடக்கம். உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்’என்று கூறியுள்ளார்.

அத்துடன் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ள எல்லா புகைப்படங்களிலும் அவருடன் மருத்துவர் பிரீத்தி இருக்க, மகிழ்ச்சியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஐஸ்வர்யாவின் இந்த பதிவுக்குக் கீழ் பலரும் அவர் சீக்கிரமே உடல்நலம் தேறி வர வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி ‘சீக்கிரம் நலம் பெறுங்கள். கோவிட்டுக்கு பிறகு நமது உடல் முழுவதுமே புதிதானது புதிரானது மாதிரிதான்’என்று சொல்லி இருப்பதை லட்சக்கணக்கில் லைக் செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction