free website hit counter

பிறவுணியுடன் வந்த வேணி, முகுந்தனிடம், தலையசைப்பையும், சிரிப்பினையும், சிக்கனம் காட்டி, ராசத்தின் பக்கமாகச் சென்றாள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

முற்றத்திலும், வளவிலும் பரவிக் கிடந்த சூரியக் கதிர்கள் எழுந்து, வேலியை நிறைத்து வரிசையாக நின்ற முட்கிழுவைகளுடன் சமராடிப் பின் சல்லாபிக்கத் தொடங்கின.

அற்புதமானது அந்த நாள். எல்லா நாட்களும் நல்லவைதான். ஆனாலும் நாம் எதிர்பார்க்காத ஒரு இன்பத்தைத் தந்துவிடும் நாட்கள் அற்புதமானவை. அன்றைய நாள் எனக்கு இன்பத்தை மட்டுமல்ல, என்னையே எனக்குத் தந்த அதிஅற்புதமான நாள்.

“அட…!”
“யோகராசா..!” ஆச்சரியப்பட்டவளே அதை நீட்டித்தாள்.
எல்லோரது பார்வையும் தன்மீதிருப்பதை கவனித்தபடியே, வந்து நின்ற வண்டிலின் பின்னாலிருந்து சைக்கிளைத் தள்ளியபடியே முன்னே வந்தான் யோகராசா.

“விட்டிட்டுப் போகேலுமே…?”

ராசத்தின் அந்தக் கேள்வி எல்லோரையும் உலுக்கியிருக்க வேண்டும்.அங்கே அமைதி கவ்வியது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: