ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு கடும் சவாலாக விளங்கும் பஞ்ஷிர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த போராளிக் குழுவுடன் யுத்தம் செய்வதை விட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் தலிபான்கள் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கான், தென் சீனக் கடல் முற்றுகை தொடர்பில் கமலா ஹாரீஸ் கருத்து
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறினாலும் அந்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை எமக்கு உள்ளது என அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான பைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா முழு அங்கீகாரம்
அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிகளில் இப்போது ஃபைசர் தடுப்பூசிகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எஃப்.டி.ஏ) முழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நியூசிலாந்தில் நாடு தழுவிய லாக்டவுன் நீட்டிப்பு! : மெக்ஸிக்கோவைத் தாக்கிய கிரேஸ் புயல்
நியூசிலாந்தில் ஏற்கனவே அமுல் படுத்தப் பட்ட நாடு தழுவிய லாக்டவுனானது குறைந்தது வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தாம் கடத்திய 121 மாணவர்களில் 15 பேரை பணயத் தொகை பெற்று விடுவித்த நைஜீரிய தீவிரவாதிகள்!
நைஜீரியாவில் சமீபத்தில் தாம் கடத்திய 121 மாணவர்களில் 15 பேரை பெற்றோரிடம் பணயத் தொகை பெற்றுக் கொண்டு விடுவித்துள்ளனர் அங்கிருக்கும் தீவிரவாதிகளில் சிலர்.
காபூல் விமான நிலையத்தில் 7 பேர் பலி! : தனது மக்களை வெளியேற்ற அமெரிக்கா தீவிரம்
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றி தலிபான்கள் ஆட்சிக்கு வந்து 1 வாரத்துக்கும் அதிகமாகி உள்ள நிலையில் தமது தேசத்தை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்திற்கு இன்னமும் பல ஆயிரக் கணக்கான ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் முற்றுகையிட்டு வருகின்றனர்.
அத்திலாந்திக் கடல் படகு விபத்தில் 52 பேர் மாயம்
அத்திலாந்திக் கடலில் அகதிகளுடன் ஸ்பெயின் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த படகு சில தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 52 பேர் மாயமாகியுள்ளனர்.