free website hit counter

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 100 அடிப்படைப் புள்ளிகளால் (bps) 9.00 சதவீதமாகவும் 10.00 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேக்களின் பங்கும் உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே இந்திய ஊடகமான Firstpost க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போது ஒப்புக்கொண்டார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 4 முதல் 31 வரை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்துக்கான ‘அஸ்வெசுமா’ பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்காக மொத்தம் 8.5 பில்லியன் அந்தந்த வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று 45 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: