ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தமது கட்சியின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர் என நேற்று தெரிவித்திருந்தார்.
நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், "ஜனாதிபதி ரணில் எப்படியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் பதவியேற்றப்பட்டார். ஏற்கனவே அவர் எங்களுடன் உள்ளார். அவர் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக பொதுஜன பெரமுனவால் ஏற்றுக்கொள்ளப்படலாம்." என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.