அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையை ஸ்திரப்படுத்தும் நோக்கில் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய புதிய உத்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ‘யுக்திய’ விசேட நடவடிக்கைகளுக்கு உதவுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.