free website hit counter

கடுமையான வெப்பத்தால் வெறிநோய் பரவும் அபாயம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கடுமையான வெப்பம் காரணமாக நாய்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகளை கடுமையாக பாதிக்கும் வெறிநோய் பரவும் அபாயம் இருப்பதாக கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் செல்லப்பிராணிகள், கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் டாக்டர் சிசிஸ்ர பியசிறி தெரிவித்தார்.

கோழிகள் மற்றும் கால்நடைகள் வெப்பத்திற்கு ஆளானால், நாளொன்றுக்கு முட்டை மற்றும் பால் உற்பத்தி குறையும் என்றார்.

கால்நடைகள் மற்றும் கால்நடை பண்ணைகளில் உள்ளவர்களுக்கு வழக்கமான நீர் விநியோகம் பராமரிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் பியசிறி வலியுறுத்தினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula